ஞாயிறு, 7 ஜூன், 2009

"தேன்மொழித்தேவதை!"

இரவினில் தாமரை
உறவினில் தேன்மழை...
இரவுகள் தேடியுன் உன்
உறவினில் நான் மழை..

மரபுகள் தாண்டியே
மங்கையுன் தாபங்கள்
இரவுகள் ஏங்கியே
இனிமையின் கீதங்கள்..

உறவினில் இரவினில்
இனிமையில் காலங்கள்
உறவுகள் கூறிடும்
இரவினின் கூடல்கள்..

இரதமாய் உன்மனம்
விரசங்கள் சேர்த்திட
விரதங்கள் முடித்திட
இரதத்தில் ஏறிட..

விரசத்தின் உச்சியை உன்
கலசங்கள் சொல்லிட தேன்
இரசத்தின் இன்பத்தை
உன்னவன் உள்வாங்கிட..

தேன்மொழி மங்கையின்
செந்தாமரை சிவந்திட
மான்விழி பேசிடும்
மருவிடும் மலரிதழ்

வான்வழி மேகம்போல்
தேன்மழை உன் பூவிதழ்களில்..
தேன்மொழி தாகங்கள்
தேன்மழை தீர்த்திட..

வான்மழை மேகமாய் ...
நான்பாடும் ராகங்கள்..உன்
தேன்பாடும் தேன்குரல்
தேன்மழை கீதங்கள்..

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3517&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக