செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (12)

அதிசய இதயம் தவழ் என் இளந்தென்றலே!

அன்போடு
ஆரத்தழுவிய வண்ணம்...
அதிசயமாய் மலரும் சுகராகங்கள் பாடிட....

இன்போடு
இதமாய் இனியநல் புத்தாண்டு
அதிரசமாய் உள்ளமதை...

திருடிக்கொள்ளும் இனிமைசுகங்களோடு......
வருடிக்கொண்டு வருகிறது!
திருடிக்கொண்டு வருகிறது!

மருவும் மலரும்
மணம் தரும் நிறைவோடு.....
மருவும் மடல் இது! உனை மருவும் மடல் இது!

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்றான் வள்ளுவன்....

துன்பம் பறக்க...
இன்பம் நிறைக்க... இனிய
அன்பும் சிறக்க ஆனந்தம் அள்ளித்தரும்.....

இனிய புத்தாண்டில்...
புதுமைகள் வரவு வைக்க...
வனிதையுன் சித்தம் குளிரவைக்க....

உன் இனிய
இதயமதின் இன்பமுத்தங்கள்!
தனிமை தவிர்த்து...உனைத்தாங்கும் இதயமதின்..

இனிய பலகவிகள்...
இதழ்கள் மடல்தழுவி...
கனிய வலம்வரும் காலம்மலர்கிறது!

மனித மனங்களை
அசைக்கும் புனித நினைவுகள்...
இனிய இதயமதில் வருடிக்கொள்கிறது!

எத்தனை ஆண்டுகள்...
எத்தனை ஆண்டுகள்...
எத்தனை சுகங்களில் எத்துணை ஆண்டுகள்...

மொத்தமாய் மொத்தமாய்.....
முத்தங்கள் முத்தங்கள்......
சத்தமாய் சங்கீதம்...சத்தம் இல்லாத சாரீரம்...

எத்தனை சுகங்களடி!
எத்தனை சுகங்களடி!
பத்தரை மாற்று உன்னால்...எத்தனை சுகங்களடி!

வித்தைகள் தருபவள் நீ!
வீணையின் வீணையடி!
இத்தரை மீதில் உன்னால் எத்தனை சுகங்களடி!

சட்டென்று கைபிடிப்பாய்!
பட்டென்று படம்பிடிப்பாய்!
மொட்டவிழ் இதழ்த்தேன் நிறைத்து....

கட்டவிழ் கவிவடிப்பாய்!
சிட்டென்று பறக்கவைப்பாய்!
சிங்காரத்தேர் இருத்தி....

மொட்டவிழ் வான்பரப்பினிலே...
கொட்டும் மழைசுகம் கொடுத்து நிற்பாய்!நீ
கொடுத்துவிடும் சுகங்கள் கொடுத்து விடும் நிஜங்கள்!

தொடுத்துவிடும் மாலைகளாய்....
எடுத்துவர புகழ்நிறைத்துவர அடுத்துவரும் தினங்கள்
கொடுத்து விடும் மனங்கள் தொடுத்துவிடும் மலர்மாலைகளாய்.......

தடுத்துவிட முடியாத
யாரும் தடுத்துவிடமுடியாத...
கொடுத்துவிடும் கலைகள்! நீ

தொடர்ந்துவரக்கலைகள்...
தொடுத்துவிடும் நிலைகள்! தேன்மொழிநீ
கொடுத்துவிடும் கடல் அலைகள்! தென்றல்தவழ்ந்து வர...மலைசுகங்கள்....

மலைக்குள்
மலைத்துவிடும்! மனம்
அலைக்குள் சிலிர்த்துவிடும்! மனவனம்...

சிலைக்குள்
சிவந்துவிடும்! செவ்வான
சிலைக்குள் நிலைத்துவிடும்!

என்மனவலைக்குள்
மலைக்கவைக்கும்....
உன்மன வலைக்குள் மூச்சாகி....

கூச்சமில்லா மூச்சுக்காற்றாகி...
அலைக்குள் அலையாகி......
ஆழ்ந்தெடுக்கும் முத்தாகி.......

மலைக்குள் மலைக்கவைக்கும்
பொதிகைத் தேன் மொழிச்சுரங்கமடி!
கலைக்கும் நினைவுகள் அலைக்கழிக்கவைக்கும் போதினில்...

கலைக்குள் கலைமகள்
நீ கவிதை சொல்லும் பேரழகு...
மலைக்கும் மகிழ்வினில் நான் எனைமறந்து போகிறேனே.....

நிலைக்கும் சுக நினைவுகள்
சுகராகங்களில் மிதக்கவைக்கும்...
எனக்குள் இருப்பவளே! என்னுயிர்க்காதலியே!

என் மனத்தை நிறைப்பவளே!
உன்னுயிராய் எனை நினைத்து....
தினத்தை வரவுவைக்க தினகரானாய் திகள் ஒளிர் கொடுக்க....

எனக்குள் நிலைப்பவளே!
தேன்கதலியாய் இனிப்பவளே......
இதுவன்றோ புதுமையடி! ஈருயிர்கள் சங்கமித்து....

மதுமலர்த்தேனுண்ட சுகங்களடி!
மாணிக்கக்கலசங்கள் ஜொலிப்பதுபோல்
மதுமலர் உன் உதயம்......

இதய ஒளிப்பதிவாய்
என்றும் இதயமதில் இனிமைதர....
மதுவன்றோ! மலர்ச்சோலைதனில் வண்டாகி.....

இதுவன்றோ இனிமையென்று
என்றும் உன்இதயமதில்....
புதுஉதயங்கள் நான்காண நான்வடிக்கின்ற கவிமலர்க்கு....

அதுவன்றோ...
கருப் பொருளாகி...
பலர் விருப்பாகும்......

புதுமலர் மலர்சுகத்தில்
மகிழ்கின்ற புது வருடமிதில்...
மதுமலர் மலர்க்கலசத்தில் தேன்மதுவுண்ட கிறக்கத்தில்....

மதுமலர் உந்தனுக்கு....
மகிழ்கிறுக்கன் இவன்கிறுக்கல்கள்...
புதுமலர் செந்தேன்மொழியுனக்கு சமர்ப்பிக்கும் புதுவருடல் இது...

வருகின்ற சுகங்களை வரவில் வைப்போம்!
தருகின்ற நிறைவினில் நிறைவுகொள்வோம்! இன்னும்
வருமென்ற மலர்வினில் மணம்பெறுவோம்!இன்னும்
வருகின்ற மடல்களில் மனம் நிறைப்போம்!

மீண்டும் மறுமடலில்.....
இளந் தென்றலாய் உனை வருடும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

நன்றி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3932&hl=
சுபம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக