வெள்ளி, 5 ஜூன், 2009

"அருமை மகளே!"


கருவினில் உனைச்சுமந்தேன்!
உருவினில் எனைவடித்தாய்!இனிய
கருவுக்குள் கனவுகள் சுமந்து
திருவுக்குள் திருவாய் நினைத்தேன்!

பெருமைக்குள் பெருமை சொல்லும்
பேருவகைக்குள் பெண்ணாய் மலர்ந்தாய்!
அருமைக்குள் அருமையாக இனிமை
அருமைக்குள் மருவும் பெண்ணே!

கருவினில் உனைச்சுமந்த உன்
அருமைத் தாயின் கண்ணீர் மடல் இது!
பெருமைகள் சொல்லும் பெண்ணே!
கருமைகள் தோய்ந்த கண்ணீர்க்

கருமணிக்கடிதம் கண்டேன்!உனைக்
கருவினில் சுமந்தபோத வளர்த்திட்ட
அருமைக்கனவுகள் கலைந்திட்ட உன்
கருமையில் கண்ணீர்க் கடிதம் கண்டேன்!

"அருமையாய் வாழ்வாய்" என்றே
அன்றுனை மணம்முடித்துக்கொடுத்து
"பெருமைகள் சொல்வாய்" என்று
அன்றுநான் மனம்மகிழ்ந்தேன்!

கருமைகள் கரைந்து கண்ணீர்
இன்றுஉன் மடல்பார்த்ததிலிருந்து
கருவினில் சுமந்தகாலம் "கனவுகள்"
என்று கண்டேன்! கவிதைநீ கதிகலங்கி

கருத்தினில் மாற்றங்காணும்
உருக்குலைத்தன்மை கண்டேன்!
கருத்தினில் தெளிவு காண்பாய்!வாழ்வுக்
கருக்குலைவுக்கு வழிநீ நாடாய்!

வருத்திடும் வாழ்க்கை மாறும்!
வருத்திட நினைக்கும் மிருகம்
உருத்தெரியாமல் மாறும்! உன்னை
வருத்திடும் நிலைதான் மாறும்!

பொறுத்திரு! பூமியாள்வாய்!
வெறுத்திடும் நிலைதான் மாறும்!
நிறுத்திடு நெஞ்சில் நீதான்!
வெறுத்திடும் நிலையை மாற்ற

பொறுத்திரு மகளே! நீயும்
பொறுத்திடும் பலனும் கிட்டும்!
கருத்திடும் வானும் விலக
வருத்திடும் நிலையும் மாறும்!

"எடுத்தேன்! கவிழ்த்தேன்! என்று வாழ்வைக்
கெடுத்தோர் பட்டியலில் நிலை
"கெடுத்தாய் நீயும்"என்ற பெயரும்
எடுத்திடா நிலை நீ உணர்வாய்!

அடுத்தவர் பலரும் சொல்வார்!
கெடுத்திட முனைந்து நிற்பார்!
விடுப்பதாய் உனது வாழ்வை
கெடுத்திடக் கனல் மூட்டிடுவார்!

விடுப்பினை கேட்கும் கயவர்
கெடுப்பினை அறிந்து நீயும்
துடுப்பெடுத்திடாதே பெண்ணே! வாழ்வைக்
கெடுத்திடாதை என் கண்ணே!

சோதனை யாவும் ஒன்றாய்
வேதனை சேர்க்கும் நேரம்
மாதுனை மயங்கச்செய்யும் மதி
வேதனை தீர்த்திடாது! மயக்கந்தான் நீயும் தெளி!

சோதனை யார்க்கு இல்லை!
வேதனை தீர்க்கும் வழிகள்
சாதனை காட்டும் நெறிகள்
மாதுனைத் தேற்றும்! மறுமலர்ச்சியை உண்டுபண்ணும்!

போதனை தாயின் அநுபவம் கண்ணே!
வேதனை தீர்த்துவிடு! விடியலும் கண்முன்னாலே!
சோதனை சூழும் போது மனம்
போதனை "பொய்வேதம்" என்னும்!

காதிலே போட்டுக்கொள்! காதலை வளர்த்துக்கொள்!
மாதுநீ நினைத்தால் நன்மை கூடிடும்! வாழ்க்கை
காதலாய்க்கனிந்து கவிதையாய் துலங்கவைக்கும்!
ஏது! நீ கவலைவேண்டாம்! கருத்தினில் தெளிவு காண்பாய்!

"அடிமை"யென்னும் "ஆண்டாள்" என்னும்
அடிமைவிலங்குகள் அறுந்துபோகும் என்றும்
அடிமைதான் அன்புக்கன்றி அதிகாரத்துக்கல்ல கண்ணே!
அடிமையாய் அன்புள் அடங்கி அறநெறி தளைக்க வாழ்வாய்!

கடிதென எதுவுமில்லை! காலம் நல்பதில்தான்சொல்லும்!
கடிதென இருப்பதெல்லாம் இலகுவாய் மாறும் மனந்தான்
கடிந்திடும் நிலை மறந்தால் கனிவோடு தெளிவுகண்டால்
கடிந்திடும் கவலை தீரும்! கருணையே உன்னைவெல்லும்!

கவலைகள் வேண்டாம் பெண்ணே!
கடவுள்தான் துணையாய் நிற்பார்!
அபலையாய் யாரும் இல்லை!
நடந்துவா! கவலை தீரும்! நிம்மதி உனக்குள் வாழும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"தென்றல் நீதான்!"

தென்றலாய் எனைத்தாலாட்டி இதய
மன்றத்தில் இடம் பிடித்தவளே!
நன்றடி! நன்று! அன்றும் இன்றும்
தென்றலாய் நினைவுகளாய் என்றும் நீ!

மன்றெலாம் மகுடம் தந்தாலும் உன்
மன்றத்தில் நீ தந்த மகுடம் அது
நன்றடி! நன்று! செந்தமிழாலே குளிரவைத்து
மன்றெலாம் வலம்வரும் சுகம்தந்தாயே!

இன்றெலாம் நினைக்கும் பொழுது!
ஒன்றோடு ஒன்றாகி உன்னோடு நன்றாகி
என்றுமே மறக்காத இளந்தென்றலாய் நீ தந்த
மன்று! மறந்திட முடியாத ஒன்று!

அன்றெலாம் உன்னை சிந்தையில் நிறுத்தி
"வென்றுவா தமிழே! நீ வென்றுவா!" என்பதே
நன்றென மந்திரம் நாளும் நான் உச்சரிக்க
நன்று நீ சொன்னாயே! நன்றியடி கண்ணே!

கொன்றெலாம் துயர்கள் வாட்டிடும்போதும்
"சென்றுவா மகனே! வென்றுவா" என்று
சென்றவிடமெல்லாம் தென்றலாய் இணைந்து
நன்று வென்றிடவைத்தாயே! நன்றி வென்றதடி கண்ணே!

தென்றலாய் வந்தாய்!தேன்மொழியினைக்கலந்தாய்
அன்றலர்ந்த மலராய் அழகுற நிறைந்தாய்!
இன்றென நினைத்தால் நினைவுகள் இனிமை!
நன்று! நன்று ! உன்வரவு உன்நினைவு நன்றடி! நன்று!

மன்றெலாம் நீ! இதய மன்றதனில் என்றும் நீ!
சென்றெல்லா மனங்களையும் குளிரவைக்கும் திங்கள் நீ!
நின்றாலும் இருந்தாலும் நடந்தாலும் நிம்மதி
மன்று அதாய் என்றும் நீதான்! தென்றல் நீதான்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4118&pid=57298&mode=threaded&start=#entry57298

"வருக! வாழ்க!"


தினம் தினம் சுபதினம்!
மனத்தினில் காதலுக்காய்த்
தினம் தினம் சுபதினம்! இதில்
தினத்தினில் வருடமதில்

தினம் ஒன்று காதலர்க்கா!இல்லையில்லை!
"மனத்தினில் ஒன்றாய் இணைந்தவர்க்காய்
தினம் ஒன்றைத்தேர்ந்தெடுத்து உலகம்
மனத்தினில் இணைத்திடவே 'காதலர்

தினம்' என்ற ஒன்று" என்று நாம்
மனத்தினில் இணைப்பதுதான் நன்று!
வனம் தன்னில் நின்றாலும் கணம்
மனத்தினில் இணைந்துசுகம் நிதம்

மனம் காண்பதே காதலர்தம் சுபதினம்!
மனத்தினில் இனம் மதம் மொழிபேதம் கடந்து
மனம் கனத்திடும் நிலைகளை போக்கி
தினம் தினம் இனிமைசுகங்களை வரவுவைத்து

மனம் ஒன்று திரண்டு வரும்
தினங்களில் துயர்கள் துடைக்க
தினம் தினம் இணைந்து போராடும்
மனங்களை வரவுவைக்கும் காதலர்தினங்கள்!

வாழ்க! வாழ்க! வளமுடன் என்றும்
வாழ்க! வருக! வளமுடன் என்றும்
சூழ்க! சுகங்கள் பலதருக! உலகம்
சூழ்க! சூழ்ந்து வாழ்த்திட காதலர்தினங்கள் வருக!வாழ்க!

நன்றி
சுபம்!
அன்புடன்

"உன்னுடன்"

கூட்டைத் திறந்து மனம் கவி
வேட்டைக்குப் போகிறது!
காட்டைக் கவிதையாக்கி
ஏட்டைப் புரட்டுகையில் மனக்

கூட்டைக் கலைத்துக் கொண்டு
பாட்டைப் பாடுகின்றாய்! நீ
பாட்டைப் பாடுகையில் உன்
பாட்டை நான் இரசிக்கையில் கலைக்

கூட்டுக்குள் அடைத்துவைத்து மன
வேட்டுக்கள் தீர்க்கின்றாய்! "என்
வீட்டுக்குள் உனை ஏன்விட்டேன்!" என்று
கேட்டுக்கொள் கேள்விக்கு "காதல்

மாட்டிக்கொள்!" என்கின்றாய்! நான்
காட்டிக்கொள்ளாமல் மௌனப்
போட்டிக்குத் தயாரானால் குறை
காட்டிக் கொல்கின்றாய்! எனை

ஆட்டிப் படைக்கின்றாய்! "எனை
வாட்டி வதைப்பது சரிதானா!' என்று
நீட்டி முளக்கிப் பிடிவாதம் செய்கின்றாய்!உனைப்
பாட்டில் கொடுத்திடவா! உன்காதலைச்

சூட்டிக்கொண்டாடிவா! மன
வீட்டில் பூட்டிக்கொண்டாடிவா! நான்
மாட்டிக்கொண்டேனடி! கண்ணே கலைமானே!
கூட்டிக்கொண்டாடடி பெண்ணே கவிமானே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4131&hl=

"இதயத்தில் நீ!"


இதயத்தின் இனிய குரல்! புதிய
உதயத்தைக் காட்டும் குரல்! இனிய
இதயத்தின் புனிதனிவன்! என்
உதயத்தின் ஒளிக்கீற்று இவன்!

இதயங்கள் மறக்காத இனிய
உதயகீதங்கள் இசைத்த குயில்!மனித
இதயங்கள் மட்டுமன்றி அசையும்
உதயஜீவன்கள் மயங்கும் குயில்!

இதயத்தை வருடும்! இமய
உயரத்தை தொட்டுமகிழும்! புதுமை
உதயத்தை உலகுக்களிக்கும்! அருமை
இதயத்தின் புனிதம் இவன்!

இதயங்கள் இருட்டாயிருக்கும் உலக
இதயங்கள் இவன் குரல்கேட்டால் புதிய
உதயங்கள் பொருட்டாய் மீட்டும்!இனிய
உதயங்கள் இவன்பாட்டில் மிளிரும்!

"காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளில் அவள் ஓவியம்!" கவி
காலங்கள் அழியாத பாடல் ஒலி
அலைகளில் அழியாத ஓவியம்! கவிக்

கோலங்கள் போட்ட கவியரசன்
"கலைத்தாயின் கவிக்கடல்"கண்ணதாஸன்
கலைக்காவியக் குரல்வண்ணன் பி.பி.ஸ்ரீநிவாஸை
"காலங்கள் அழியாத குரல்மேதை" என்று இசைக்

கோலங்கள் இமயத்தைப் புகழ்ந்தவிதம்
கலைக்கோலங்கள் இதயத்தை நிறைத்த இதம்
"மலைச்சிகரங்கள்" எம்.எஸ்.வி ராமமூர்த்தி புகழ்
காலங்கள் அழியாத இதய மதுரக்குரலோன்!

காலங்கள் அழியாத குரல்வண்ணன்! கவிக்
கோலங்கள் போடும் கவிக்கண்ணனிவன் பல
மலை மொழிகளின் பார்புகழ் நாயகன் பி.பி.ஸ்ரீநிவாஸன்
கலை மொழிகளின் ஓவியன்! என் இதயத்து இனிய நாயகனே!

காலங்கள் காலங்கள் நீ வாழ்க!
கலைக்கோலங்கள் புகழோடு நீ வாழ்க!
ஞாலங்கள் போற்றிடும் நீ வாழ்க!
காலைக்கதிரவன் ஒளியாக நீ வாழ்க!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"சத்தியம் ஜெயிக்குமடி!'

சத்தியம் பேசுவது சுலபம்! சிலரின்
சத்தியதைப்போல சக்தியில்லாத
சத்தியம் பேசுவது சுலபமடி கிளியே!
புத்தியதைப்போல சிலரின் குறுக்குப்

புத்தியதைப்போல பொய்ச்சத்தியம்
பத்தியம் இல்லாத புத்தியதைப்போல
சத்தியம் பேசுவது சுலபமடி கிளியே! உன்
புத்தியதைப்பாவியடி! பித்தலாட்டப் பொய்ச்

சத்தியம் பேசுகின்ற புத்திசாலிகளை
மத்தியில் காண்பியடி! பித்தலாட்டங்களை
மத்தியில் தோலுரித்துக்காண்பியடி!அவர்
சத்தியம் பொய்யென்று முச்சந்தியில்

புத்தியில் உறைக்க வைத்துக்காண்பியடி!
"பக்தியில் சக்தியில் சத்தியம் ஜெயிக்கும்!
மத்தியில் பித்தலாட்டப் பொய்யர்கள் மத்தியில்
சக்தியில் மெய்ச்சத்தியம் ஜெயிக்கும்" என்று

புத்தியில் புகட்டிடுவாய் கிளியே! அவர்
புத்தியில் புகட்டிடுவாய் கிளியே! போலி
யுக்திகள் வேஷங்கள் மோசங்களெல்லாம்
சக்திகள் அற்று சந்திசிரிக்கும்படிவைத்து

புத்தியைப் புகட்டிடுவாய் கிளியே! போலிப்
பக்திகள் நீலிக்கண்ணீர்கள் தோற்று
சத்தியம் ஜெயிக்கவைப்பாய் கிளியே! நாச
சக்திகள் நீங்கிடச் செய்வாய் கிளியே!

நெத்தியடியடி கிளியே!சக்திவெடியடி கிளியே!
புத்தியடியடி கிளியே! பக்தியடியடி கிளியே!
சக்தியடியடி கிளியே! உண்மைச்சக்தியடியடி! என்றும்
சக்தியுள்ள சத்தியசோதனை வெற்றிகள் சக்தியடி!

கத்திமுனை நின்றிருந்தாலும் சத்தியம் ஜெயிக்குமடி!
பக்திமுனை நிகர் சக்திக்கு முன்னாலே எத்தர்கள்
சக்திகள் சத்தியெடுக்குமடி! கிளியே! அவர் புத்திக்குள்
"சத்தியம் சாதிக்கும்" என்றே சான்றுகள் சொல்லிடடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

"சுட்டும் பதில்"


"கேட்டுச்சொல்" என்றாய்! நானும்
கேட்டுத்தான் பார்த்தேன்! பதில்
காட்டுஞ்சொல் ஒன்றாய் வந்து நானும்
காணும்படி வந்ததே! இதயக்
கூட்டுச்சொல் நன்றாம்! தேனும்
தினைமாவும் சேர்ந்தால் நன்றாம்! குறி
காட்டுஞ்சொல் நன்றாம்! வந்து குறி
காட்டித்தான் பார்த்தேன்!

"வாட்டும்நிலை போக்கி, தினம்
தீட்டும் கவிபோலே, சுதி
கூட்டும் சுகராகம், மலை
நோக்கும் மனம்போலே,
காட்டும்கலை காக்கும்! வதை
வாட்டும் நிலைபோக்கும்! கனம்
கூட்டும் புவிமேலே, சுதி
ஓட்டும் இதய சோகபாரம்! உதயம்,

காட்டும்கிழக்கு நோக்கும்! மதி
காட்டும் வழிபிறக்கும்! நம்பி,
நீட்டும்கரம் சேர்ப்பாய்! சுதி
கூட்டும் விழிசேர்ப்பாய்! நதி
காட்டும் வழி நோக்கி, நடை
போட்டால் ஒளி பிறக்கும்! எனவுன்
வாட்டும் வழிபோக்க விடை
போட்டால் வழிதிறக்குமே!" என்றதே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"இதயநல் வாழ்த்துக்கள்!"

அகரத்தில் ஆரம்பம்!
அருணனின் ஆதித்தம்!
சிகரத்தில் ஓர் கம்பம்! வான்
அருணனின் ஆதித்தம்!

அருணனின் பதம்போற்றி
வருடத்தின் ஆரம்பம்!இதய
வருணனின் மழைபோலே உதய
வருடத்தின் வாழ்த்துக்கள்!

இருள் மனங்கள் அகன்றிடவே
ஒளிர் மனங்கள் நிறைந்திடவே நிலா
அருள் மனங்கள் வளர்ந்திடவே
தளிர் தினங்கள் நிறைந்திடவே!

பொருள் நிறைந்த பொதிபோலே
இருள் அகன்று ஒளிர்போலே புலர்
பொருள் நிறைந்த படைப்புக்கள் நிலா
அருள் மலர்ந்து நிறைந்திடவே

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
இதய நிறை வாழ்த்துக்கள்!
வாழ்த்துகின்ற உதயங்கள்
இதய நிறை வாழ்த்துக்கள்!

நிலா முற்ற நல் மனங்கள் அனைவர்க்கும்
இதய நிறை நல் வாழ்த்துக்கள்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

"அன்றைய இன்று!"

சிந்தையைக்குளிரவைக்கும் தென்றலுடன்
சொந்தம் கொண்டாடிநின்றேன் அன்று!
சந்தம் இசைத்தவண்ணம் சங்கீதக்கடலில்
சிந்தையை மூழ்கடித்தாள் தென்றல்!

மந்தைக்கூட்டத்தில் மாதவன்கோபாலன்
சந்தம்இசைக்கும் புல்லாங்குழல்போல் என்
சிந்தைக்குள் இனிமைபெற சிருங்காரரசத்தோடு
சந்தம் இசைத்துநின்றாள் இசைத்தென்றல்!

சொந்தம் அவள்மடியாகி சிந்தைஅவளாகி
நந்தவன மலரவள் நறுமணத்தோடிசைந்துவர
சிந்துநதிக் கரையில் சிந்துகவி பாரதியாய்
சுந்தரமாய்க் கவிகொடுத்தேன் அன்று!

அந்தநாள் இந்த நாள்!தென்றல் எனைக் கலந்தநாள்!
இந்தநாள் அந்த சுகம் நினைத்தாலே இனிக்குதடி!
அந்தநாள் நினைவுகளை இன்று அசைபோட்டிடவே
இந்தநாள் மலர்ந்ததடி! இதயக்கவி பிறந்ததடி! நன்று!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4149&hl=

"உயிர்க்கலை!"

இன்றுபோல் இருக்கிறது! அன்று
இன்றுபோல் இருக்கிறது! இன்று
கன்றுபோல் மனது நின்று
வென்று துள்ளிக்குதிக்கிறது!வாழைக்
கன்றுபோல் தென்றலாய் இதயம்
இன்று துள்ளிக்குதிக்கிறது!உதயம்
அன்றுபோல் ஒளிச்சுடராய்
நின்று அள்ளிச்சிரிக்கிறது!

"என்று வரும் வசந்தம்
என்றுவரும்!' என்ற கேள்விக்கு
"என்றுமே மனம் இசைந்தால்
நன்றுவரும்!இதயம்
என்றுமே தினம் வசந்தம்
என்றும் கொண்டு வரும்!"
என்று இன்று என்மனம்
நன்று சொல்லிச்சிரிக்கிறது!

ஒன்று மட்டும் உண்மை!
ஒன்று மட்டும் உண்மை!
வென்று வரும் இளமை
நன்று இனிமை மனமென்றிருந்தால்
என்றும் வரும் சுகந்தம்!
நன்றும் தரும் மகரந்தம்!
என்றும் தேனூறி வாழ்க்கை
நன்று தந்துவிடும் புதுவசந்தம்!

இன்று ஓர்கனவில் கவிதைப்பெண்ணே!
நன்று நீ இணைந்தாய் இனியவளே!
கன்றிவிடும் கன்னம் கனிமுத்தங்கள்
நன்று நான் இணைத்தேன் கனியவளே!
"வென்றுவிடு!"என்றாய்! "என்னை
நன்று வெற்றிகொள் நீ!" என்றேன்!"நீங்கள்
ஒன்றிவிட்ட பின்பு உங்கள் இதய
மன்று வெற்றிதானே என்வெற்றி!" என்றாய்!

அன்றிலதாய் என்னுள் நீ
நின்றிருக்கும்போதில்
நன்றிலதாய் ஆகுமா!
நன்றில் என்றுமே ஆகுமே!
ஒன்றிலதாய் ஆகுமா! வெற்றி
என்றிலதாய் ஆகுமா!
அன்றிலதாய் ஆனவளே!
என்றும் சலனம் இதில் இல்லையே!

கொன்றுவிடும் கவலைகளை
வென்றுவிடும் உன்இதழ்க்கலை!
சென்றுவிடும் இடமெல்லாம் மனம்
நன்றுதரும் என் இதயக்கலை!
என்றும்வரும் தினம் கவிக்கலை! சினம்
வென்று மனங்களைச் சீர்திருத்தும்கலை!
என்றும்வரும் மனக்குயிற்கலை!
தென்றல்தழுவலடி! நீ என் உயிர்க்கலை!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்