திரும்பிப்பார்த்தால் அருவெருப்பு!
அரும்பும்பொழுதே தெரிவதுண்டு!
இரும்பு இதயம் எதுவென்று!-எனவே
கரும்பின் கதைதான் அருமருந்து!
துரும்பாய் இழைத்து துவண்டுவிடும்!
கரும்பாய் நினைத்துக் கசந்துவிடும்!
இரும்பாய் இதயம் இருந்துவிட்டால்-நீ
திரும்பாய்! திரும்பிப்பார்த்திட விரும்பாய்!
திரும்பும் திசைகளில் உன்னிதயம்
விரும்பும் மனங்களில் அசைந்துவரும்!-இதயம்
அரும்பும் இசைகளாய் பின்னிவர
விரும்பும் தினங்களும் இசைந்துவரும்..
திரும்பிட நினைத்தால் நல்வழிதிரும்பு
விரும்பிட மனத்தால் நல்மனந்திரும்பு!-நீ
இரும்பிடம் பேசும் கொள்கை விடு!
திரும்பிடும் நேசம் கொள்கை எடு!
வரும்பிணி விலகும்! வாழ்வது துலங்கும்!
அரும்பணி தொடரும்! ஆழ்கடல் முத்தாய்-உனை
வரும்பணி மிளிரும்! வானமும் வாழ்த்தும்!
தரும்பிணி விலக தருமும் தளைக்கும்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3348&hl=
காதல் முத்து (3)
14 ஆண்டுகள் முன்பு