திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்"! (5)

16-8-2005
----------
"இதயம் எழுதும் மடல்"! (5)

"வசந்தத்தில் ஓர் நாள்!"
-------------------
அன்புக்குள் சுகம் காணும் சுகராகமே!

அது என்னவோ,
உன் மனது பாடும் சுகந்த ரதம்,
எனது மனதில்
புது வசந்த ராகம் இசைத்து,
இதமாக பதமான புதுமைத் தென்றலைநிறைத்து,
பாடி வர,
எனையறியாமல் உனது மனதோடு பின்னிப்பிணைத்து,
இணைத்து இனிமைதர,
எனது கணப்பொழுதுகளையும் குவித்து,
கவி புனைய யுகப் பொழுதுகளும்,
கரைந்த கணப்பொழுதாய் மறைகிறதே!


"ஏன்" என்ற கேள்வி எழுந்தாலும்,
பதில் சரமாக புதிரதன் பதிலாய் சுதிராகம் இசைக்கிறதே!
ஏன்! உன் உயிருக்குள் காதல் பயிர்வளர்த்து,
தன்னிலை மறந்த
தேன்மலரேந்தும் மதுவாக,
தேனை அள்ளிச் சொரிந்து,
வாரி வழங்கிடத் துடிக்கிற உள்ளமாகி,
வெள்ளமாக இன்பவெள்ளமாக,
மனம் துள்ளித் துடித்து இதழ்வடிக்கிறதே!


வடிக்கின்ற தேனை,
அள்ளிக் குடித்துவிடத் துடிக்கின்ற தேன்இதழ்கள்,
இதமாக
பதமாகித் தழுவி வருடிக் கணப்பொழுதினையும்
வீணாக்காமல்,
வீணையாய் சுருதி மீட்டுகின்ற விந்தை
என்னடி பெண்ணே!
அத்தனையும் கொட்டிக்கொடுத்து அதிசயிக்க
அரவணைத்து விடுகிறாயே!


தான் எனும் நிலைமறந்து,
தேனாகி உன்னை உயிரோடு கலந்து,
கலவிக்குள் குலவி,
கவிதைத்தேன் கொடுத்து,
இன்பத் திணறலைத் தருகிறாயே!
துருவித் துருவிப் பார்க்கிறேன்!
திகைப்புத்தான் பதிலாகி வருகிறது!


அது என்ன!
மாது உன் மனதிற்குள் அத்தனை மதுமலர்ச்சி!!
புதுமலராகும் மலர்வனமாகும்,
சுகந்த நறுமணமாகும் உன் உணர்வுகள்,
சுதிராகம் மீட்டுகின்ற விந்தை!
மீட்டிவிடும் விரல்கள் மீட்டிவிட,
"மீட்டு! மீட்டு!" என்று,
இன்னும் மீட்டிவிடத்துடிக்கும் வண்ணம் செய்கிறாயே!
கூட்டிவிடும் சுகமாகிறாயே!
கன்னம் கன்றிவிடும் நாணம் கொண்டுவிட
இன்னும் கவிதையுடன் கதைகள் உண்டே!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்
16-8-௨௦௦௫


"இதயம் எழுதும் மடல்" (4)


30-06-2005
"இதயம் எழுதும் மடல்" (4)

"நித்திரைமேகங்களின் சித்திரக் கோலங்கள்!"
--------------------------------------------------------------

உயிருக்குள் உணர்வோடு இணைந்திருக்கும் தென்றலே!

இது என்ன மர்மம்!
மதுமலர் உன் மனமலர்வில் இணைந்து,
மதி காலைப்பொழுதிற்குள் தனைமறந்து,
தன்நிலை மறந்து,
சுதி இராகமதை இணைத்து,
சுகந்தம் உன் உணர்வுக்குள்
சதிராடும் போதில்,
ஒரு சந்திப்பு!
இரு உணர்வுகள்
ஒன்றுக்குள்
புதிர்போடும், பதில் பிணைப்பு!
அதிகாலைப் புதிர்த்தித்திப்பு!

உன்மதுவிதழ் திறந்து,
மெதுவாக ஓர் தென்றலின்
இதமானமென்வருடல்!
மின்காந்தம்
உயிர்பாய்ந்து உயிர்கலந்த
அன்பான வருடல்!
முழுநிலா முற்றமதில் முழுவதுமாய்,
உன்நிலை மறந்த ஓர் தழுவல்!
தழுவலின் தென்றல்!

என்நிலை மறந்து
"என்னடி என்செல்வமே!" என்கின்றேன்!
'என்நிலை என் உயிர் மூச்சு சொல்நிலை
சொல்வது தெரியலையா!" என்கிறாய்!
"தெரிகிறதடி! தெரிகிறதடி!
புரிதல்இல்லாத உணர்வுகளா இப்படிப் பேசுகிறது!
விரிதல், மன விரிதல்,
வானத்தில் வானம்பாடிகளாய்,
புரிதல் புணர்தல்,
பூம்புனலாய் இன்பம் பெருகி ஒன்றாய்
தெரிதல்!
அது தானே உணர்தல்!
இதுதானே காதல்!
"புரியலையா" என்றால் என்னடி இதன் அர்த்தம்"
என்றேன்!

"புரிந்திருந்தும் ஏன்மௌனம்?
நான் படும்பாடு தெரிந்திருந்தும்,
விரிந்திடும் ஆசைகள் தெரிந்திருந்தும்,
ஏன்மௌனம் அத்தான்!
வருந்திடும் நிலைகள்,
வருத்திடும் நிலைகள்,
உங்களை
வருத்திடும் கவலைகள், தெரிந்திடலாமோ?
நான் தெரிந்திடலாகாதோ?
புரிந்திருந்தும்,
எனை நன்றாய்ப் புரிந்திருந்தும்
பின் ஏன் மௌனம்?"
என்றாய்!

மௌன விழிப்பார்வைக்குள் அர்த்தம்,
அது ஆயிரம்
மலர்களின் மௌன மலர்யுத்தம்!
பித்தத்தில் சித்தத்தைக் குளிரவைக்க,
மௌனமாய் இதழ்இசைத்து,
" ம்..உன் அன்புக்குள்,
அரவணைப்புக்குள்
மௌனமாய்
மோதும் பார்வைக்குள்,
மோதும் ஆசைகள் கோடியடி! மனம்
மௌனமாய் ஊறும்,
இன்ப உயிர் ஓசைகள் ஓடிவந்து,
நாடிநரம்புகளை, இனிமையாய் மீட்டுதடி!

தனிமையாய்
தவித்திருந்த நிலைமாறி,
இனிமையாய் இன்பம் கூட்டுதடி!
வனிதை உன் வரவில்,
இதயம்
இனிமையாய் துன்பம் போக்குதடி!
நீக்கமற உனக்குள்ளே,
இனிமையாய்
மீட்டுகின்ற வீணையாய்,
ஏக்கமுடன் நீ இணைகையில்,
இனிமையாய்
கூட்டுகின்ற வனிதையாய்,
என்னோடு நீ இருக்கையில்,

எனக்கேது கவலையடி!
கவலைகள் தொலைந்ததடி! கவிதையாய்
எனக்காக உனைத்தந்து
உயிர்கலந்து இருக்கையில், இனி
எனக்கேது கவலையடி!"
என்றேன்!
தென்றலாய் உனை வருடி,
எனக்காக,
எனக்குள்ளே இருக்கின்ற உனை மருவி,
இதழ் பருகி,
எனக்கேது
தடையென்ற உரிமையினால்,
உன்னிதழ்த் தேன் பருகி,

இசைத்தேன்!
இனிமையாய் நீ இசைந்து
என்மார்போடு தவழ்ந்தாய்!
"இதைத்தான்
வனிதைநான் நினைத்தேன்!
என் இதழ்த்தேன் தனைத்தான்
அத்தான், நான் தரத்தான் துடித்தேன்!
தயக்கம் என்ன! என்னிதழ்மது
அத்தான்!
அது என்றும் உங்களுக்கே அத்தான்!"
என்று இதமாக இதழ்பதித்தாய்!
முத்தான
உன் உயிர் கலந்த
முத்தங்கள் பித்தாக்க,
முழுநிலவு குளிர்சேர்க்க,

"இத்தனை நாள் எங்கிருந்தாய்!
என்நிலவே! இத்தனை நாள் எங்கிருந்தாய்!
அத்தனை சுகங்களையும்,
சுகந்தமாய் நிறைக்கின்ற
என்முத்தழகே!,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
சத்தமில்லாத சங்கீத ஸ்வரங்களாய்,
அத்தனை சுகங்களோடு,
பொங்கிவரும் கடலோடு,
சங்கமிக்கும் முத்தாக,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
என்செல்வமே!" என்றேன்!

"அத்தனையும்
உங்களுக்கு ஆசையாய்ப் படைப்பதற்கே,
இறைவன்
இத்தனைநாள் மறைத்திருந்தான்!
மொத்தமாய் உங்களுக்கே!
அத்தான்!
அத்தனையும் எடுத்து,
சுகம் உங்களுக்குள் சேர்த்திடுங்கள்!" என்றாய்!
இத்தனைநாள்
காத்திருந்த சுகந்தமிவள் சேர்த்துவைத்த
முத்துக்கள் இவை!
அத்தனையும்
கோர்த்து அன்பு மேனிக்குச் சூட்டிடுங்கள்!
உங்கள்

சொத்து இவை" என்றாய்!
ஒன்றாய்
உயிர்கலந்த
மூச்சுக் கலவி
முத்து அதன் வாய் திறக்க,
மௌனம்
சம்மதமாய் இதழ்விரிக்க,
கொத்துக் கொத்து அதாய்,
தேக்கி வைத்த முத்தங்கள்,
காதல்
பித்துக்குள் புகுந்துகொள்ள,
இதமாக இழுத்தணைத்து,
அழுத்தங்கள்
முத்து அதன் வாய் திறக்க,
முத்தான முத்தங்கள், முத்து முத்தாய்த்

தடம்பதிக்க,
பித்தாகிப்போனோம் நாம்!
முத்தாகி, வெயர்வை முத்துக்கள்
உடல் கொதிக்க,
தென்றல்
தெம்மாங்கு பாடியதன் கொதிப்படக்கி,
உடல் தழுவ,
இடம்பிடித்த இன்பங்கள்,
பொங்கி வழிந்திருக்கும் சுகந்தங்கள்,
மடல்விரித்த,
உன்மௌன விழி படித்த பாடங்கள்,
கடல்நிறைக்கும்!
மடல் விரிக்கும், இணைந்த காதற்பாடங்கள்!
கடல் மை கொண்டு வரைந்தாலும்,
இடம் போதாத தாள்வானம்!
அது நீள் நித்திரைமேகமதன் சித்திரக் கோலங்கள்!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்
--------- அன்புடன்
ஆதித்ததாஸன்.
30-06-2005
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3083&hl=

"இதயம் எழுதும் மடல்" (3),


25-06-2005 -------
"இதயம் எழுதும் மடல்" (3)
"தனிமைக்குள் இனிமை"
----------------------------------
இனிமையுள்ள இதயமே!

இனியென்ன கவலை உனக்கு!
கனியமனம் கனிந்து வந்து கவிதைமழை பொழியும்போது,
தனிமையுள்ள நிலையில்கூட தழுவிவரும் இளந்தென்றல்,
தருகின்ற சுகந்தம் நிறைந்து வழியும்போது,
வனந்தனில் தனித்திருந்தாலும் இனித்திருக்கும் இனிய சுகந்தம்,
நிறைத்திருக்கும் இனிமை வசந்தம்!
மனந்தனில் மகிழ்வு மலர்ந்துவிடும் தனிமை வசந்தம்!

தனித்திருக்கும் மனதில்,
துணையன்பு இணைந்திருக்கும் நிலையில்,
பனித்துளியில் மனந்தான் இலயித்திருக்க,
கனிந்திருக்கும் கணங்கள்,
இனிமை இணைந்திருக்கும் சுகங்கள்,
நினைத்திருக்க நினைத்திருக்க,
இனித்திருக்கும் இன்பம்,
என்றும் தனிமை உணர்த்திவிடும் வசந்தம்!
வாழ்வில் வரவில் வைத்திருக்க,
தனித்திருக்கும்,
தனித்திருந்து இரசித்துவிடும்
நினைவுத்தென்றல் தழுவிடும் வசந்தம்!

மனந்தனில் மனதோடு மருவிநின்று
மௌனமொழி தினம் தினம் பேசிவிட,
இனம்புரியாத இனிமை,
கனந்தரும் இதயம்கூட கரைந்து,
கனம்தொலைந்து,
மனம் மகிழ்கின்ற தனிமை தருகின்ற இனிமை,
என்றுமே வாட்டம் ஓட்டிவிடும்,
நன்று காட்டிவிடும்
மனம் ஒன்றாய் கூட்டிவரும் இனிமை,
வென்றுமே, இளமை வென்றுமே,
ஒன்றாய்ப் பாட்டிசைக்கும் தனிமை,
என்றுமே இயற்கை அளித்துவிடும்இனிமை!
உனக்குள் உணர்வில் உயிரில் ஒன்றாய்க் கலந்திருக்கும் தனிமை!

நன்றி
சுபம்!
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
25-06-2005..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3066&hl=

இதயம் எழுதும் மடல் (2)


22-06-2
---------------------
"கனாக்காலக் கார்காலக் கவிதை!"
-----------------------------------------------

கண்களுக்குள் மனக்கண்களுக்குள் சதிராடும் சுதிராகமே!

மதிராகம் மனதோடு மனம்போல தினம்பாட,
கனமான இதயமதை இதமாக
மயிலிறகால் மருவி வருடிவிட,
தினம் தினம் கணம் கணம் கனவுக்கதவுகள்,
உன்வரவை எதிர்பார்த்து
ஏக்கத்துடன் காத்திருந்து வரவுவைக்க,
இரவுகள் இனிமையாய் உறவுக்குப் பாய்விரிக்க,

கண்களுக்குள்
கனிமொழி உன்கனவு கவிதை காணும்!
கலவிக்குள் குலவிக்கொள்ள,
மனப்புண்களுக்கு இதமாக
உன்கனவு ஒத்தடம் கொடுக்கும்!
மெத்தனவே இளமை
மெதுவாக விழித்துக் கொள்ளும்!
விழித்துக்கொள்ளும் விழிகள்
வழிமொழியும் தென்றல்,
மெதுவாக மலரணையாய் சுகமான சுகம்சேர்க்கும்!

கண்களால் கவிதைபாடி
கவிதையாய் சரமாகி,
ஈரமான இரகசியம்
இரகசியமாய் சரசத்தின்
சாரீரம்,
சாமரம் வீசுகின்ற தென்றலோடு
உயிர் ஒன்றிவிடும் சாகஸம்!
என்றுமே காதல் உயில்
உயிருக்குள் கார்மேக மழைபொழிய,
காதல் பயிரோடு பயிர்,
பத்திரமாய் சித்திரமாய்
உயிரோடு உயிர் ஒன்று கூடிவர,
ஓடிவரும் கவிதையின் கவிதை,
அது கனாக்காலக் கார்காலக் கவிதையடி!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை

நன்றி
சுபம்
-------
அன்புடன்
ஆதித்ததாஸன்!
22-06-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3056&hl=

"இதயம் எழுதும் மடல்" ( 1), "கவிதை சொல்


1-07-2005. ----------------------
"கவிதை சொல்லும் கனவு!"
-------------------------------------------
கவிதையின் கவிதைக் கண்மணி சுகந்தமே!

காவியத்தில் இல்லாத
கனிமை! இதய உதய
ஓவியத்தில் இல்லத்தில்
அன்பின் ஒளிர்மை!

தாவிவரும் தேன்தமிழாய்,
தழுவிவரும் இளந்தளிராய்,
மேவிவரும் வான்நிலவாய்,
வருடிவிடும் இளங்குளிர்மை!

நீவிவிடும் தலைமுடியை நீ
கோதிவிட்டுக் கண்விழியால்,
மேவிவரும் உன்பார்வை,
கோர்த்திருக்கப் பலகேள்விக்கணைகள்,

து}விவிடும் துளிப்பனியாய்
தழுவியெனைத் தொடுத்திருக்க,
தாவிவரும் தளிர்க்கூந்தல்,
தவழ்ந்து சுகம்சேர்த்திருக்க, இதழ்

மேவிவரும் தேன்துளிகள்
இணைந்து அகம் துடித்திருக்க,
"காதல் சுகங்காணும் கவிதைக்கருதேடி,
மனக்கண்கள், அதன்

தேடல், யுகம் மறக்கும் நிலை தானோ?
கூடல் சுகம் காண,
காதல் கலவி சுகம் சேர்க்க,
கண்கள் சொல்லும் கவிகூட,

பாடல் சுகம் காணும் நேரம் இதுதானோ?..
போதும் இனித்தேடும்
தேடல் சுகம் காண்போம்!
வாடல்தனைப் போக்கி இதயத்தேடல்

கூடிவர, நாடிவரும் சுகம்
நாடிநமை அழைக்கிறதே! நாம்
நாடிவரும் சுகங்களை,
நாடிவிட என்ன தடை! விடை

தேடிவர, நாம் வெகுநேரமதை
வீணாய்க் கழித்திடாமல்,
கூடிவரும் சுகநேரமிது! இன்பம்
தேடிவரும் சுபநேரமிது!

பாடிவர தெம்மாங்கு இதமாகப் பாடிவர,
மீட்டும் இன்ப வீணையிது!
நாடிநரம்புகளின் துடிப்பறியும்
படிப்பாளர் நீங்கள்! இந்தப்

பாடிவரும் பைங்கிளியின்
துடிப்பறிய முடியலையா! சுகந்தமிதை
சூடிவிடத் தோணலையா? விரகதாபம்
தீர்த்துவிடத் தோணலையா!

கூடிவிடத் தென்றல் தவழ்ந்து
சுதிகூட்டிறதே! விரல் மீட்டிவிட
நாடிநிற்கும் வீணையிது! மீட்டுங்கள்!
சுகராகம் கூட்டுங்கள்!

ஒன்றாய், உயிரோடு
உயிரொன்றாய் இணைந்தபின்,
ஒன்றுசேர இன்னும் என்ன தடை?"
என்றபடி மடிசாய்ந்தாய்!

"நன்றாய் சொன்னாயடி!..
ஒன்றாய் உயிர்கலந்த, உண்மையன்பு
என்றாகிவிட்ட பின்பு,
தயக்கமென்பதேது! உன்விழிகலந்த அன்பு

வென்றாகிவிட்ட பின்பும்
தயக்கமென்பதேது! தழுவி உன்னை
தென்றலாய் அணைப்பதற்கு,
தயக்கம் என்பதேது..நெஞ்சம் என்ற

மன்றமதில், உனை அணைத்து சுகம் கொடுப்பதற்கு,
தயக்கம் என்ன உண்டு!
அன்றலர்ந்த மலர்உன்னை,
தென்றல் இவன் வருடி, சுகம் கொடுத்து,

ஒன்றக்குலவி விட,
இன்று என்ன தயக்கமடி! நன்றடி! நன்று!
உண்டுவிட, தேனை ஊற்றி நீ கொடுத்துவிட,
அன்றலர் மலர் உன்

செண்டு முகம் வருடி,
உண்டு இன்பம் பருகிவிட, அன்புமழை பொழிந்து,
"உண்டு, இகம் இந்த இன்பம்,
உயிர்கலந்து கொண்ட இன்பம்", என்று

கண்டுவிடும் மனங்கள் இவை!
இதழ்க் கவிதை சொல்லிவிடும் மிகுதி இதை!
கண்டு விடும் சுகந்தங்கள்
காத்திருக்கும் இன்பசுகந்தங்கள்,

உண்டு! இன்னும் உண்டு பல!" என்று,
உன் விழிமருவி, உன் இதழ்த்தேன்
உண்டு, கன்னம் சிவந்துவிட கன்றிவிட,
இதழ்முத்தங்கள் ஒன்றிவிட,

கண்டு வரும் கவிதைசுகம் உண்டு,
இன்னும் உண்ண உண்ண,
நன்று! நன்று! ஒன்றாய்
வென்று விடும் இளமை சுகம்,

நன்று! இன்று, நாம் ஒன்றாய்
தென்றல் வளம் சேர்க்கும்
இன்று, நன்று அடி பெண்ணே! நாம்
ஓன்று சேரும், இன்று

நன்று! என்றும் இன்றுபோல் நாம்
ஓன்றாய் சேரும், சுகம்
என்றுமே நன்றடி!" என்று உனைத்தழுவி,
உயிர்கலந்த மூச்சில்

நன்றாய் முத்தங்கள்,
உடல்மொத்தமாய்ப் பதித்தேன்! முத்தங்கள்,
நன்றாய் சித்தங்கள் குளிர,
மொத்தமாய் அத்தனையும் பரிமாறி,

"என்றுமே இதுவேண்டும்"
என்று நீ இதழ்முணுமுணுக்க,
"வருமடி! காலம் கனிந்து இன்னும்
வருமடி! என்றும் உன்

திருமடி சாய்ந்து
சேர்ந்து கொண்டு கதைபடிக்க,
வருமடி! காலம் கனிந்து இன்பம்
தருமடி!" என்று

திருமடி சாய்ந்தேன்! தென்றல்
சுகந்தமாய் சுகந்தம் நீ,
"கருமணியாக காத்திருப்பேன்!
கண்மணியாகப் பார்த்திருப்பேன்!

பெருநிதியாக நினைத்திருப்பேன்!
உங்கள் அன்பை,
வருநதியாகச் சேர்த்திருப்பேன்!
பொங்கும் சுகங்களாய்,

அருமதியாகக் குளிர்
சேர்த்திருப்பேன்" என்றாய்!
அருமருந்தான உன்
விருந்து வாயமுதம் சிந்திய,

பெருவிருந்தான உன்இதழ்
விரித்த சுகம்சேர்க்க,
அருவிருந்தாக உனை
அரவணைத்து, அதரம்பதித்து,

வருவிருந்துக்கு வரவுவைத்து
வருடிவிட, மருவிவிட,
"அருமலர்ந்த அந்தப் பொழுது புலர்ந்ததே" என்று
அருமலர் உன்அதரம் அசைந்து இசைத்துவிட,

அருபுலர்ந்த அந்த
அதிகாலைப் புலர்பொழுது,
அருமருந்தான அந்த
விருந்து தந்த சுகத்தோடு,

இகம்மறந்தோம் நாம்!


நன்றி
சுபம்
---------
மறுமடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஆதித்ததாஸன்.
1-7-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3041&hl=