செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (12)

அதிசய இதயம் தவழ் என் இளந்தென்றலே!

அன்போடு
ஆரத்தழுவிய வண்ணம்...
அதிசயமாய் மலரும் சுகராகங்கள் பாடிட....

இன்போடு
இதமாய் இனியநல் புத்தாண்டு
அதிரசமாய் உள்ளமதை...

திருடிக்கொள்ளும் இனிமைசுகங்களோடு......
வருடிக்கொண்டு வருகிறது!
திருடிக்கொண்டு வருகிறது!

மருவும் மலரும்
மணம் தரும் நிறைவோடு.....
மருவும் மடல் இது! உனை மருவும் மடல் இது!

"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்றான் வள்ளுவன்....

துன்பம் பறக்க...
இன்பம் நிறைக்க... இனிய
அன்பும் சிறக்க ஆனந்தம் அள்ளித்தரும்.....

இனிய புத்தாண்டில்...
புதுமைகள் வரவு வைக்க...
வனிதையுன் சித்தம் குளிரவைக்க....

உன் இனிய
இதயமதின் இன்பமுத்தங்கள்!
தனிமை தவிர்த்து...உனைத்தாங்கும் இதயமதின்..

இனிய பலகவிகள்...
இதழ்கள் மடல்தழுவி...
கனிய வலம்வரும் காலம்மலர்கிறது!

மனித மனங்களை
அசைக்கும் புனித நினைவுகள்...
இனிய இதயமதில் வருடிக்கொள்கிறது!

எத்தனை ஆண்டுகள்...
எத்தனை ஆண்டுகள்...
எத்தனை சுகங்களில் எத்துணை ஆண்டுகள்...

மொத்தமாய் மொத்தமாய்.....
முத்தங்கள் முத்தங்கள்......
சத்தமாய் சங்கீதம்...சத்தம் இல்லாத சாரீரம்...

எத்தனை சுகங்களடி!
எத்தனை சுகங்களடி!
பத்தரை மாற்று உன்னால்...எத்தனை சுகங்களடி!

வித்தைகள் தருபவள் நீ!
வீணையின் வீணையடி!
இத்தரை மீதில் உன்னால் எத்தனை சுகங்களடி!

சட்டென்று கைபிடிப்பாய்!
பட்டென்று படம்பிடிப்பாய்!
மொட்டவிழ் இதழ்த்தேன் நிறைத்து....

கட்டவிழ் கவிவடிப்பாய்!
சிட்டென்று பறக்கவைப்பாய்!
சிங்காரத்தேர் இருத்தி....

மொட்டவிழ் வான்பரப்பினிலே...
கொட்டும் மழைசுகம் கொடுத்து நிற்பாய்!நீ
கொடுத்துவிடும் சுகங்கள் கொடுத்து விடும் நிஜங்கள்!

தொடுத்துவிடும் மாலைகளாய்....
எடுத்துவர புகழ்நிறைத்துவர அடுத்துவரும் தினங்கள்
கொடுத்து விடும் மனங்கள் தொடுத்துவிடும் மலர்மாலைகளாய்.......

தடுத்துவிட முடியாத
யாரும் தடுத்துவிடமுடியாத...
கொடுத்துவிடும் கலைகள்! நீ

தொடர்ந்துவரக்கலைகள்...
தொடுத்துவிடும் நிலைகள்! தேன்மொழிநீ
கொடுத்துவிடும் கடல் அலைகள்! தென்றல்தவழ்ந்து வர...மலைசுகங்கள்....

மலைக்குள்
மலைத்துவிடும்! மனம்
அலைக்குள் சிலிர்த்துவிடும்! மனவனம்...

சிலைக்குள்
சிவந்துவிடும்! செவ்வான
சிலைக்குள் நிலைத்துவிடும்!

என்மனவலைக்குள்
மலைக்கவைக்கும்....
உன்மன வலைக்குள் மூச்சாகி....

கூச்சமில்லா மூச்சுக்காற்றாகி...
அலைக்குள் அலையாகி......
ஆழ்ந்தெடுக்கும் முத்தாகி.......

மலைக்குள் மலைக்கவைக்கும்
பொதிகைத் தேன் மொழிச்சுரங்கமடி!
கலைக்கும் நினைவுகள் அலைக்கழிக்கவைக்கும் போதினில்...

கலைக்குள் கலைமகள்
நீ கவிதை சொல்லும் பேரழகு...
மலைக்கும் மகிழ்வினில் நான் எனைமறந்து போகிறேனே.....

நிலைக்கும் சுக நினைவுகள்
சுகராகங்களில் மிதக்கவைக்கும்...
எனக்குள் இருப்பவளே! என்னுயிர்க்காதலியே!

என் மனத்தை நிறைப்பவளே!
உன்னுயிராய் எனை நினைத்து....
தினத்தை வரவுவைக்க தினகரானாய் திகள் ஒளிர் கொடுக்க....

எனக்குள் நிலைப்பவளே!
தேன்கதலியாய் இனிப்பவளே......
இதுவன்றோ புதுமையடி! ஈருயிர்கள் சங்கமித்து....

மதுமலர்த்தேனுண்ட சுகங்களடி!
மாணிக்கக்கலசங்கள் ஜொலிப்பதுபோல்
மதுமலர் உன் உதயம்......

இதய ஒளிப்பதிவாய்
என்றும் இதயமதில் இனிமைதர....
மதுவன்றோ! மலர்ச்சோலைதனில் வண்டாகி.....

இதுவன்றோ இனிமையென்று
என்றும் உன்இதயமதில்....
புதுஉதயங்கள் நான்காண நான்வடிக்கின்ற கவிமலர்க்கு....

அதுவன்றோ...
கருப் பொருளாகி...
பலர் விருப்பாகும்......

புதுமலர் மலர்சுகத்தில்
மகிழ்கின்ற புது வருடமிதில்...
மதுமலர் மலர்க்கலசத்தில் தேன்மதுவுண்ட கிறக்கத்தில்....

மதுமலர் உந்தனுக்கு....
மகிழ்கிறுக்கன் இவன்கிறுக்கல்கள்...
புதுமலர் செந்தேன்மொழியுனக்கு சமர்ப்பிக்கும் புதுவருடல் இது...

வருகின்ற சுகங்களை வரவில் வைப்போம்!
தருகின்ற நிறைவினில் நிறைவுகொள்வோம்! இன்னும்
வருமென்ற மலர்வினில் மணம்பெறுவோம்!இன்னும்
வருகின்ற மடல்களில் மனம் நிறைப்போம்!

மீண்டும் மறுமடலில்.....
இளந் தென்றலாய் உனை வருடும்வரை...

அன்புடன்
ஆதித்ததாஸன்

நன்றி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3932&hl=
சுபம்....

இதயம் எழுதும் மடல் (11)


இதயத்தை இனிமையாக
வருடும் இளந்திங்களே!

நலமா! நலமறிய ஆவல்!
நலமுடன் நாடிவரும் இன்பங்கள் தாலாட்டிட
வலம் வரும் வான்மதியாய்
வான்தவழும் திங்களதாய்
நீ எங்கும்
எப்போதும் நிறைந்திருக்க
இனிமையோடு நிறைந்திருக்க
என்றும் இறையருள் துணையிருக்கும்!

அன்று என்மடல்பார்த்த சந்தோசம்
"என்றும் வேண்டும" என்றாய்!
"இருப்பினும் ஓர் குறை!
அது என்ன வான்கோழிக்கதை!
வான் கோழிக்குணம் எனக்கேதையா!
நான் உங்கள் தமிழோடு
தவழ்கின்ற தென்றலவள்!
எனக்கேது வான்கோழிக்கதை"

என்றாய் மனதோடு!
பைத்தியமே! பைத்தியமே!
அதனாற்றான்
வைத்தியமாய் பக்கத்தில்
உனக்கேது அக்குணம்
என்றுபோட்டேனே!
அசடு! அசடு!
உன்அழகிதயத்தில் குடியிருக்கும்.....

இவன் மன உதயம் புரியாததா உனக்கு!
பைத்தியம்! பைத்தியம்!
அடி! அன்புப்பைத்தியமே!
போடி மண்டு!
"வாடி என்பக்கத்தில்!" என்றதும்
ஓடிநீ வந்துதரும் வசந்தம்
என்தனுக்கு என்றும் புதுசுகந்தமே!
"தாடி" என்று கேட்குமுன்னே....

பலநூறு தருவாயே!
வாடி நீ வதங்கிட்டால்
வதங்தகிடாதோ என்மனம்!
போடி!பைத்தியமே!
சித்த வைத்தியம் என்னிடம்!
உன் அன்புப்பைத்தியம் தீர்க்கும்
சித்தவைத்தியன்
நான்என்பாய்!

தேனாகி தேன்மொழியாகி
நானாகி நீயிருக்கும்
மானே! நீ என்னை அறிவாயே!
உனக்கெழுதும்
மடல்கூறும் கதைகள் பல
உன்உடல் தழுவும்
தென்றல் என்பாயே!
அப்படியிருக்கையில் ஏனடி!

கள்ளி! உனக்கு ஏனடி வருத்தம்!
வருத்தம் விடு!
மருத்துவனாய் நான் இருக்க
வருத்தம் வேண்டாம்! வருத்தம் விடு!
கதையோடு கதை
உன் "நேசிக்கும் தென்றல்" பார்த்தாயா!
வதையோடு
இன்பவதையோடு ஒன்றாய் சேர்த்தெடுத்த....

சுடரொளியாள் படர்ந்திடும்
வளர்ந்திடும் அழகை
நீ இரசிக்காததா!
பழகும் தென்றல்
படரும்தென்றல்
பல மனங்களோடு இரசம் சேர்க்கிறதாம்!
"விரசம் கலந்தாலும்
விபரம்தெரிந்த ஆள் நீங்களென்பாய்!"

"நேசிக்கும் தென்றல்"
என்னடி சொல்கிறது பெண்ணே!
"மண்ணுக்குள் புதுமைப்பெண்ணாய்
அவள் வளர்வாள்"
என்ற நம்பிக்கை
நம்பிக் கை
கொடுக்கிறது!
நம்பிக் கை தருகிறது!

இன்றைய நாள்
நினைவிருக்கா!
அன்றைய
நாள் என்றுமே மறந்திடக்கூடுமா!
அன்று
பயணித்த அன்று
உன் கண்கள் பனித்த நாள்!
"பிரிவு" என்ற ஒன்று....

என்னையும் உன்னையும்
உடலளவில் கடல் பிரித்து
வான் வழிசுமந்து
மடலெழுதும் நிலை தந்த நாள்!
வான் மதியுனக்கு
கடலெழுதிய கடல்நீர்
உன்கண்ணிறைத்து
விழிமடல் எழுதிய நாள்!...

தழுவிவரும் தென்றல் உனை
பிரிவு மடல் தழுவிய நாள் இன்று!
பரிவு! அதனோடு பிரிவு!
இணைந்துவந்து
கடமைகள் அழைக்க
காத்திருப்புக்கு வழி
வகுத்த நாள் அன்று!
இன்று நினைத்தாலும்......

மனது கசக்கிப்பிழிகிறது!
வார்த்தைகளால்
மழுப்பி மனம் மறைத்து
"அடி!பைத்தியமே!
இன்னும் நான்கு வருடங்கள்!
காத்திரு!
பூத்திருக்கும் உன்விழிகளுக்கு
பரிசுகள் காத்திருக்கு" என்றேன்!

மனதுள் பொங்கிநின்ற துயரக்கண்ணீரை
மனதுக்குள் பொத்திவைத்து
உன்னை ஆற்றினேனே!
பக்குவமாய்
உன் பரிசுத்த இதயமதில் கண்டுணர்ந்து
"பக்குவமாய் மறைத்துவிட்டு
என்னை நீங்கள் தேற்றுவது
எனக்குப்புரிகிறது!

போய்வாருங்கள்!
என்றுசொல்ல மனதில்லை!
உங்கள் மனதோடு
நான் வருகிறேனே! தடையென்ன அதற்கு"
என்றாய்!
உன் உணர்வுகள் படம் பிடித்த
என்நிலைபுரிந்த உன்இதயமதின்
சக்தி உணர்ந்து வியந்தேன் அன்று!

இன்று நினைத்தாலும்
புத்திதான் பேதலிக்கிறது!
பைத்தியம் நான்தானடி! பைத்தியமே!
மத்தியில் மனங்களின்
மத்தியில் இடம்பிடித்த என்னால்
என் புத்தியைச்சரியாய்
வைத்திருக்க முடியாத
திண்டாட்டம்!

பக்தியோடு பல கதைகள்
பக்குவமாய் நீ சேர்த்திருந்தாய்!
சக்தியோடு சக்தியாக
சிக்குகின்ற புதிர்களுக்குப்பதில்தெரியா
புத்தியுடன் நான் இருந்தேன்!
கச்சிதமாய் புரிந்து காற்றலையோடு
சக்தியதை நீ கொடுக்க
சக்தியுள் புத்தியுள் சக்திமிக்க...

சாதனைக்கு வழிசெய்த
சக்தியுன்னால் சக்திபெற்ற சக்தியானேன்!
இன்று நினைத்தாலும்
உன்சக்திதந்த தென்பு புத்தெழிலாய்
வென்றுவிட வைக்கிறது!
'தொட்டதெல்லாம் ஜெயம்" என்ற
சக்தியாக மிளிர்கிறதே!
உடலால் பிரிந்திருந்தாலும்....

சக்தியுள்ள உணர்வாலே
சந்தித்தித்து சந்தம் இசைக்கின்ற
விந்தை யார்க்குவரும்!
நமைத்தவிர யார்க்கு அது
கிடைத்துவிடும்!
நினைவோடு நினைவுகளாய்
நினைவுகளால் மடல்வரைந்து
கனவுகளின் சங்கமத்தில்...

சங்கமிக்கும் நினைவுத்தென்றலே!

மீண்டும் மற்றுமொரு மடலில்
இளந்தென்றலாய் திங்கள் உனை வருடும்வரை.....

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3839&hl=

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (10)



உதயத்தைப்பார்த்து
இதயத்தைச் சேர்த்தெடுத்த இளந்தென்றலே!

இன்றும் மடல்வரைய
நேரம் கூடிவந்து தாலாட்டுகிறதே!
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்!

காதல்!காதல்!காதல்!
கனவுகளில் கவிதைகளில்
கவிதை உன் நினைவுகளில்.....

காதல் மொழிபேசும் உணர்வலைகள்!
என்றும் உன்சொந்தமான
தாலாட்டுத் தென்றல்தான்!

தென்றலை நேசிக்கும்
பிரியமானவன் பிரியமாய்
மடல்களின் உரிமமாய் தவழ்ந்திருந்து.....

தவித்திருக்கும் உடல்தனுக்கு
பாலூட்டும் நேரம் இது! மதுரசப்
பாலூட்டும் நேரம் இது! "தேனூடும் இதழ்களில்...

தேன்தமிழூறும் அலைகளுக்கு இடைவெளியா!" என்றாய்!....
இடைவெளியா! இடைவளியா! காற்றின் இடைபுகுந்து
மடைதிறந்து மடல்திறந்து மனந்திறந்து பேசிவிட...

காற்றின் வெளிக்குத் தடையேது!
காற்றின் அவைகளுக்கும் தடையேது!
தவழ்ந்துவரும் தென்றலில் திங்கள்

இணைந்துவரும்போது....
தடைபோட யாருண்டு!
தடைதாண்டிவிட தடையேது!

விடைபுரியா மயங்கிடும் மனங்களுக்கு
நடைபயிலும் தென்றல்தான் விடை சொல்லிடுமே!
"அவள் அப்படித்தான் தொடர் என்னாச்சு!" என்று என்னவள்

நீ மனதோடு கேட்பது புரிகிறது!
வரிந்துகட்டி அவளை இழுத்துவர இஷ்டமில்லை!
அவள் எப்படியோ வருவாள்!

"எப்போது வருவாள்!"
என்ற கேள்விக்கு "அவள் வரும்போது
வருவாள்!" என்பதே பதிலாகும்!

"என்ன றஜனி ஸ்டைலா என்கிறாயா!"
எப்படியோ சொல்லிக்கொள்! அப்படியே அவள்
எப்படித்தான் வருவாளோ அப்படியே வரட்டும்!

"சரி! சரி! அதைவிடுங்கோ!
"நேசிக்கும் தென்றல்" சுடர்விழி என்னானாள்!" என்று கேட்கிறாயா!
யாசிக்கும் அவள் எனக்குமட்டும் சொந்தம் என்றாள்!

"உங்களை நேசிக்கும் என்னை
ஏன் வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகிறீர்கள்!" என்கிறாள்!
என்ன நினைத்தாளோ! சட்டென்று திரும்பி...

"சரி!சரி! காட்டுங்கள்! நீங்கள்தான்
கவிதைகளில் கதைகளில் பலர்
கதைகளைப் படம்பிடிப்பீர்கள்!

நல்ல மனங்களில் இடம்பிடிப்பீர்கள்!
தடைசொல்ல நான் யார்! தொடருங்கள்!" என்றாள்!
"நானும் உங்கள் வாசகிதானே!

உங்களை வாசித்து நேசிக்கும் வாசகிதானே!
வாசிக்கின்றேன்! வாசகர் முற்றமதில் பதியுங்கள்! பார்க்கின்றேன்"
என்கிறாள் இப்போது!

நிலாவவள் ஆதங்கம்
உன்தனுக்கு பொறாமைதான் தரும்!
நிலாவவள் ஓர்தங்கம்! அவள்

நீ பொறமைப்படும் ஒருத்தியல்ல!
வருத்தம் வேண்டாம்! கங்கை சடைவைத்தவனும்
திங்கள்தனைச் சூடிய விந்தைக்கதை புதிதல்லவே!

சந்தைக்கு வந்த கதைதானே!
வாடிய மனந்தனில் வருடுகின்ற தென்றல் நீ!
உனக்கு இது புரியாததா!

புரிந்ததானால்தானே....
நேசிக்கும் தென்றலானாய் நீ!
திங்களவள் முற்றமதில் இணைந்து...

தாலாட்டும் சுடரொளிக்கதிரொளி
மறைந்திருக்கும் செடிகொடிகளுக்கும்
ஒளிகொடுக்கும் நிலைதானே!

படம்பிடிக்கும் பலரின்
பொறாமைக்கு பதில் சொல்லும் நீ
பொறாமைப்படுவாயா!

இல்லையில்லை!
நீ என்றும் அந்நிலையில் இல்லையில்லை!
என்னவள் உன்னிடம் பொறாமைப்பேச்சுக்கே இடமில்லை!

உனக்கு நன்கு புரியும்!
பொறாமை மனங்களில் சுடரொளி தங்குவதில்லை!
சுடரொளி தன்னைக்கொடுத்து இனிமைதருவாள்!

தனிமைவிரட்டி இனிமை தருவாள்!
மடல்விரித்து மகிழும் இளந்தோகைமயிலவள்!
"வான்கோழி வான்மயில்தோகைப்போர்வைக்குள்

நுழைந்திட்டால் கானமயிலாகிடுமா!"
தோகைமயிலாகத்தோன்றும் பல வேடங்கள் போடும்
வான்கோழி மனிதமனமல்ல அவள்மனம்!

தேனோடு தேன்தமிழாய்
சுடர்பரப்பும் சுடரொளியாய் தென்றலாய்த்
தவழ்ந்திருக்கும் திங்களவள்!

பொங்கும் பூம்புனலாய் எங்கும்
அவள் சுடர்வீசிடுவாள்!
"என்ன! சுடரொளி பற்றிய புராணமாய் இன்றைய மடலா!"

என்று....
நீ விழிப்புருவ உயர்வு வேண்டாம்!
"சுடரொளி" என்னவோ தெரியவில்லை....

மனதோடு இடம்பிடித்த
உன்னோடு சண்டைபிடிக்கிறாளே!
அன்புச்சண்டை அது!

நீ அடம்பிடிக்காதை! அவள் அன்புப்பிரியை!
புரியாத பல புதிர்களைப் போட்டு எனைத்
திக்குமுக்காடச்செய்தவள் அவள்!

அவளை அன்போடு ஏற்றுக்கொள்வாய்!
பண்போடு மனிதப்பண்போடு ஏற்றுக்கொள்வாய்!
வெறும் "வாய்ப்பண்பாடு" பேசுபவர் மத்தியில்...

என்பாடு நீயறிவாய்!
என்னோடு இணைந்திருக்கும்
என்பாடு உனக்குப் புரியாததல்லவே!

கூட்டுக்குள் இதயக்கூட்டுக்குள்
இணைந்திருக்கும் உன்தனுக்குப்புரியாததா!
உயிரோடு ஒன்றாய் ஒரு போர்வைக்குள் உணர்வோடு....

உடல்தழுவி இதயவானில் சிறகடித்த நாட்கள்
நினைவுதர கனவுகள் உன்னோடு
உதயத்தை நாடிவிட மனதோடு....

என்னோடு என்னுயிரோடு கலந்து
உன்னோடு பேசிய நிறைவோடு......
இனிமை உணர்வோடு....

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும்வரை...
நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3788&hl=

இதயம் எழுதும் மடல் (9)



இதயத்து உதயத்து நிலவே!


இனிமையுள்ள இதயம் ஒன்று
அன்றலரந்த மலராகி வனிதையுன்னை
வந்தடைந்த வரலாறு படைத்த விந்தை...

தனிமைதனை விலக்கி
தவிப்புக்கள் தனைநீக்கி இனிமை
உலகமதை உனைக்காண வைத்ததே!

மனிதநேயம் மதித்திட
மலர்ந்த நேயம்.. புனிதமுள்ள
மனதோடு இனிதமாக இணைந்து...

இசைவாக புனிதவேள்விக்குள்
தடம்பதித்த சுகங்கள்!
இடம்பிடித்த சுகராகங்கள்...

நடம்பயின்ற விந்தை
நயமான விந்தை!
சந்தத்தில் உன் சிந்தைகுளிர்வித்து...

"இந்த உலகில்
இப்படியும் சுகங்களா."...
என்ற புருவ உயர்வோடு.....

"எப்படியும் சந்தித்தே தீர்வது
இந்த சுகங்களை" என்று
சிந்தையில் நிறுத்திவைத்த சங்கற்பம்...

சாத்தியமானதடி!
சாத்திரங்கள் தொலைந்து சுக
சாத்திரம் ஒன்றெனக்கரைந்து...

நிறைந்திட்ட இதயம்
உதய இன்பவேள்விக்குள்
தடம்பதித்தது எப்படிச் சாத்தியமானதடி!

நீர்த்திவலைகள் வேர்த்திருந்து
சுகம் சேர்த்திருந்த விழிச்சந்தோச
நீர்த்திவலைகள்.... அகம்மலர்ந்த தாமரை

முகம் சிவந்து பார்த்தவிதம்....
யுகக்கணக்கணக்கில் பார்த்திடத்தோன்றுதடி!
இகத்தில் மட்டுமல்ல.. ஏழேழ்பிறப்பிலும் இணைந்திட்ட

சொந்தமாக எண்ணிட வைத்ததடி....
"வந்தோம் பார்த்தோம்
போனோம்" என்றா இருந்தோம்...

பார்வைகள் பரிமாறி
இதயக்கோர்வைகள் கவிதை பாடிவிட....
உதயகீதம் சந்தம் இசைத்து சுதிமீட்டிட....

வீணையாக நீயும்
மீட்டும் விரல்களாக நானும்.......
தேனுண்ணும் வண்டு தேன்நிறைந்த மலர்மீதமர்ந்து....

தென்றல் தழுவலுடன்
கூட்டும் சுகந்தமுடன் அசந்தநிலையில்
இசைந்திருந்த தேன்மலரே!..

உன்தேன்மொழி அதரங்கள்
வெளுத்துவிட...வான்கதிர்சுடரொளி
கண்ணதாஸன் கொடுத்திட்ட பாடலதாய்.......

மடிமீது தலைவைத்து
விடியும் வரை கதைபடித்து
விழிகள் சிவப்பாகி விடிந்தது தெரியாமல்......

கிழக்கு விழிபார்க்க
விழித்திட்ட கதிரவனின் சிவப்பு
உன்முகம் பரவ.....

கழித்திருந்த நாள்
மறந்திடமுடியாது..மறந்திடமுடியாதடி...
விழித்தபடி பார்த்திருந்தாய்!...

"என்னடி பார்க்கிறாய் கள்ளி.".
என்று கேட்டதற்கு.".ம்..ம்..புலவருக்கு
விடிந்தது தெரியாது சுதிநயமோ."..

"மதியோடு மதிசேர்ந்து கதிரொளியாய்
விதியெழுதும் கதைதனைப்பார்க்கிறேன்!கவியெழுதும்
காந்தவிழிக்கண்களைப்பார்த்த வண்ணம் இருக்கவேண்டும்"

என்றாய்.."போடி பைத்தியமே..
உன் கிருஸ்ணகாந்தவிழிமுன்னால்
இந்தக்கொள்ளிக்கண் எந்த மூலையடி!" என்றேன்...

கொல்லென்று சிரித்து
சில்லென்று என்விழியில் இதழ்பதித்து
நல்தவழும் தென்றலதாய் தலைகோதிவிட்டாயே..

"அலைமோதும் ஆசைகளைத்தூணடிவிடும்
உன்விழிகளது வடித்தகவிதைக்கு.....
ஆசைகொண்ட உன்னவனின் ஏழிசைகீதமடி இது."..என்று

மீட்டிநின்ற காலங்கள்..
என்றும் சேர்த்திருக்கும் கோலங்களாய்
திசைகாட்டியதன் திசைக்கு...என்னை இழுத்துவந்து...

உட்காரவைத்து
இதயம் மீட்டீய என்சுந்தரிக்கு
மடல் எழுதவைத்ததடி..

நேரம் இதயம் எழுதுவதை
மடலில் எழுதுதற்கு முடியாதநிலைதான்..
கிடைக்கும் நேரமெல்லாம் எழுதுகிறேனடி...

உடைக்கும் அணைதிறந்த வெள்ளமென
மனது எழுதுவதை மடல்
எழுதமுடியாதபடி நேரந்தான் பிரச்சனை...

இலட்சனைகள் மனது பதிக்கிறது..
உனது இதயம் எழுதும்மடல்
இன்னும் விரியுமடி..

நினைவுகளின் தழுவலோடு
சுகம்சேர்த்திருப்போம்...
கனவுகள் கவிதைபாடட்டும்...

கவிதையுன் கண்களில்
வேண்டும் வரம் ஒன்று..
என்றும் உனைத்தீண்டும் சுகம் என்றும்...

வேண்டும் வரமாக
வேண்டுமடி கள்ளி...மீண்டும்
மறுமடல்வரை இனிமைசேர்க்கட்டும் இம்மடல்...

மீண்டும் மறுமடலில் தென்றலாய் வருடும் வரை...

நன்றி
சுபம்..

அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3615&hl=

இதயம் எழுதும் மடல் (8)



ஒன்றாய் இதயமதில் இணைந்திருக்கும் இதயமலரே!

நன்றாய் எதிர்பார்த்து எதிர்பார்த்து
"என் இதயமதின் மடலைக்காணவில்லையே!"
என்று ஏக்கமுடன் தாக்கங்கள் நிறைத்திருப்பாய்!

இதய
மன்றுதனில் எழுதுவதை
உதயமுன்றல்தனில் நீ எதிர்பார்ப்பது
நன்றுதான்! நன்றுதான்!

ஒன்றாய் உயிர்கலந்த
உன்னுறவு உனக்கும் எனக்கும்
நன்றாய்ப் பிணைந்ததுதான்!

அன்று
உன் காந்தவிழி பேசியது
இன்றும்
மனதோடு பேசுதடி!

என்றும்
இனிமையின் சுகராகமாய்
நன்று கதைபடித்து கவிதை கிறுக்க வைக்குதடி....

அன்று நனைந்து தோய்ந்து
இதயம்
பேசியதன் எதிரொலிகள்
இன்றுபோல் இருக்குதடி....

"பர்ர்த்தேன் ரசித்தேன் பக்கத்தில் அழைத்தேன்....
என்று
பாடியவன் பார்த்திருந்தால்
பல கோடிக்கவிதைகள் புனைந்திருப்பான்!

ஒன்றுமட்டும் உண்மையடி..!
உன்
காந்தவிழி பார்த்தபின்தான்
இவன்
ஏதோ கிறுக்கத்தொடங்கி...
என்
முதல் இரசிகை அதுநீதானே..

கிறுக்கனின் கிறுக்கலுக்குள்
உருக்கம் இருக்கென்றாய்...
இரக்கம் இருக்கென்றாய்...
"கருக்கிவிடும் எதிரிகளின் இதயமதை
உங்கள் கிறுக்கல்" என்றாய்..
"இரக்கமில்லா அரக்கத்தனங்களை

உருக்கி அழித்திடும் உங்கள் கிறுக்கல்"
என்றாய்...
பெருக்கிவிடும் நல்மனங்களை
உங்கள் வசமென்றாய்!

"இருக்கிறது!..இருக்கிறது! ..
உங்கள் கிறுக்கலுக்கு
சக்திஇருக்கிறது"
என்றாய்!
"என்னவோ என்மேல் உள்ள காதலினால்

கூறுகின்றாய்" என்றேன்!
"காதலினால் அல்ல
உங்கள்
ஏறுநடைதெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்....
"உங்கள்
வீறுகொண்ட வீரம்தெரிந்துதான் கூறுகின்றேன்"
என்றாய்..
ஊறுகின்ற உன்னிதழ்கள் கூறுகின்ற அழகை
நான்
இரசித்துநிற்க..

நாணிநின்றாய்!
நாணிநின்றவாறு காதல்மொழி பேசிநின்றாய்..
ஏணியதாய்
உன்னாலே நான்கண்ட ஏற்றம்
கூற்றுவனும் நெருங்கவிடா
வாணியுந்தன் காதல் ஏற்றம்..

"காணிநிலம் வேண்டும்" என்றான்
கவிபாரதி..."கலை
வாணியுந்தன் காந்தவிழிபோதுமடி எந்தனுக்கு"
என்றேன்..
"நினைவுளதாடி!!..."

ஆணியடித்ததுபோல் அச்செழுத்துக்காரி நீ.!.
அச்சுக்குள் உன்
இதயம்
நாணிநீ சேர்த்தெடுத்த கவிதையது நினைவிருக்கா..
இன்றும் என்
இதயம்

ஏணியதாய் ஏற்றமுடன்
ஏற்றிவைத்த பலவிளக்குகள் விளக்கம் சொல்லும்..
வாணி நீ! கலைவாணி நீ!
கவிதைக்குள் நிலை வாணி நீ...
என் இதய

உதயமானவளே!
உன்
இதய அரவணைப்பில்
என்
இதயம் புலம்புவது
கவிதையல்ல..

உன்னிதயம் துடிப்பதுதான் கவிதையடி..
கண்ணே!...
"கதையும்கவிதையும் காசுதரவேண்டாம்!
உங்கள்
மனதுதனை ஆறு அதாய்
உதயசூரியனாய்
மகிழவைத்தால் போதும்" என்பாய்...

" உண்மைதானடி கண்ணே!
உன்
அன்பு அதுதான் மதுவெனக்கு...மயக்கமதைத்தந்து
மகிழவைக்கும்
உன்னன்பு
அதுவொன்றே என்றும் என்னுடன் கதைபேசும்...

உன்
பெண்மையின் நளினம் தருகின்ற
உண்மையின் இரகசியம்....அதுதானடி!
என்
மகிழ்வின் உச்சம்!" என்றேன்...
அப்படியே என்மேல் சாய்ந்தாயே!...
அன்றுதந்த

சுகம் ....
கோடிகொடுத்தாலும் கிடைக்காதே!...
இகத்தில்மட்டுமல்ல...
அகம்
தரும் சுகம் மறுபிறப்பிலும் இணையவேண்டி
இறைவனை வேண்டுகிறேனடி...

சுகங்களில்
சுகமான இராகமாய்
சுகவீணையாய் சுருதிமீட்டவேண்டுமடி கண்ணே!
சுகங்களோடு சுகநினைவுகளோடு
சுருதிமீட்டிய
இன்ப இதயவீணையே!...

மீண்டும்
மற்றுமொரு மடலோடு தென்றலாய்உனைத்தழுவும்வரை.....

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3347&hl=

இதயம்எழுதும்மடல் (7)


"கேள்வியதன் பதில்!"
---------------------
இதயத்து இனிய மனதுக்கு!

உதயத்தில் ஒருநாள்
உன் குரல் கேட்டு இதயத்தில்
மலர்வுகொண்டேன்!
இன்ப இதயத்தைக் கண்டுகொண்டேன்!

புலர்கின்ற பொழுதாகி
மலர்கின்ற மலராகி, கனிந்த கனியாகி
ஏனிந்த மாற்றம்!

இனம்புரியாத இன்ப மாற்றம்!
நானிந்த
நிலைமாற வானந்தான்,
வான் அலைதந்த கோலந்தான்,
கலை ஞானந்தான் காரணமா!

மலை தந்த மனத்தோடு,
கலை தந்த சுகத்தோடு,
கவித்தாய் தந்த அன்புப்பாலோடு,

பாடி வரும் இளந்தென்றலின் தெம்மாங்குத்
தேன் தமிழோடு,
ஓடி வரும் நதியலையாய் உள்ளம்
பாடிவர,
சூடிவரும் சுடரொளியாய் இதயம் நாடிவரும்
நிலை ஏனோ?..

கூடிவரும் மனங்களில்,
ஓடிவரும் கணங்களில், இளமை
தேடிவரும் நிலைதானோ?..

நாடிவரும் நிஜங்கள், சூடி
வரம் கேட்கையில்,
"தாவிவரும் வேட்கை, தளிர்க்கொடியின்
தழுவலதன் சேர்க்கை",
என்று கூடி இருமனங்கள் ஒன்றாய்
கூவிவரும் குரல்கள், கூறுவது என்ன!

மனங்கள் ஒன்றாய்
ஆறுவது, ஆறுதலாய் தேறுவது,
ஆறு அதாய், தேன் ஆறு
அதாய், ஊறுவதன் காரணந்தான் என்ன?..
காரணங்கள் யாதோ!

தோரணங்கள் அசைந்து, இசைந்து
மனம்மகிழ்ந்து,
காரணங்கள் மறந்து,
காவியங்கள் நினைந்து, ஓவியமாய்
நெஞ்சில் சாய்ந்து கொள்ளும்போது,

சேர்ந்து கொள்ளும்
கொஞ்சல், கெஞ்சுவது சொல்லும்,
காரணத்தைக் கேட்டால்,

"காதலதன் மஞ்சம் காதலர்கள் நெஞ்சம் கூறுவதுதானே
ஆருயிரின் தேடல் ஓருயிரின் பாடல் கூடிவரும் கூடல்"
இதுவன்றி ஏது!.......

இனிமை இதய இளந்தென்றலின் வருடலோடு
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
29-06-2005.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3151&hl=

இதயம் எழுதும் மடல் (6)


"ஆசைக்கனவுகள்!"
--------------------------

இனிய மலருக்கு தென்றலின் இனிய வருடலுடன்!

இயற்கை மடியில்
இறைவனின் வடிப்பில் எத்தனை
இனிமைகள்!

இயற்கை ஒன்றிய
உயரிய உணர்வுகள் புணர்கின்ற
இனிமைகள்!

இனிய தென்றலாய்
இதமாய் மனங்களில் எத்தனை
இனிமைகள்!

வானத்துச் சூரியன்
மோனத்திலிருக்கையில்,
கானத்து மேகங்கள்

மௌனித்திருக்கையில்,
கார்கால மயில்களின் சேர்காலக் கனவுகள்
கானத்துக் குயில்களின்

மோனத்தவங்களின் ஊர்கோல
நினைவுகள்,
வானத்துச் சூரியன்

வாசல் வருகையில்,
மௌனத்தவங்களின் மலரும் சுக
நினைவுகள்!

சுகங்களின் சுகங்கள்
சுகங்களின் சுகந்தங்கள்- அவை
இனங்களின்,

உயிர் இனங்களின்
சுகராக ஸ்பரிசங்கள்!
என்றும் மனங்களின் மத்தியில்,

மலர்கின்ற இதயத்தில்,
வளர்ந்திடும் எண்ணங்கள்,
முகங்களின் மலர்வுகள்,

மகிழ்கின்ற உதயத்தில்,
வளர்ந்திடும்
காதல் வண்ணங்கள்!

கனிந்துவர,
காதல் கனிந்துவர,
கார்கால சுகங்கள்,

ஊர்கோலக்கனவுகளாய்
கலந்துவர,
காதல் கவிதைகள்,

சேர்கோல சுகங்கள்,
கார்கால மயில்களாய்
இசைந்து இன்பம் கூட்டிவிட,

துன்பங்கள் தொலைந்து,
சங்கீத ஸ்வரங்களாய்
அசைந்துவரும் ஆசைக்கனவுகள்,

ஓசையின்றி இசைவாக இசைகிறதே!
இசைகினற இனிமைக் கனவுகள்
வரவுவைக்க வரும் இளந் தென்றல்
இதமாக வருடிவிட

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை...

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
28-06-2005.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்"! (5)

16-8-2005
----------
"இதயம் எழுதும் மடல்"! (5)

"வசந்தத்தில் ஓர் நாள்!"
-------------------
அன்புக்குள் சுகம் காணும் சுகராகமே!

அது என்னவோ,
உன் மனது பாடும் சுகந்த ரதம்,
எனது மனதில்
புது வசந்த ராகம் இசைத்து,
இதமாக பதமான புதுமைத் தென்றலைநிறைத்து,
பாடி வர,
எனையறியாமல் உனது மனதோடு பின்னிப்பிணைத்து,
இணைத்து இனிமைதர,
எனது கணப்பொழுதுகளையும் குவித்து,
கவி புனைய யுகப் பொழுதுகளும்,
கரைந்த கணப்பொழுதாய் மறைகிறதே!


"ஏன்" என்ற கேள்வி எழுந்தாலும்,
பதில் சரமாக புதிரதன் பதிலாய் சுதிராகம் இசைக்கிறதே!
ஏன்! உன் உயிருக்குள் காதல் பயிர்வளர்த்து,
தன்னிலை மறந்த
தேன்மலரேந்தும் மதுவாக,
தேனை அள்ளிச் சொரிந்து,
வாரி வழங்கிடத் துடிக்கிற உள்ளமாகி,
வெள்ளமாக இன்பவெள்ளமாக,
மனம் துள்ளித் துடித்து இதழ்வடிக்கிறதே!


வடிக்கின்ற தேனை,
அள்ளிக் குடித்துவிடத் துடிக்கின்ற தேன்இதழ்கள்,
இதமாக
பதமாகித் தழுவி வருடிக் கணப்பொழுதினையும்
வீணாக்காமல்,
வீணையாய் சுருதி மீட்டுகின்ற விந்தை
என்னடி பெண்ணே!
அத்தனையும் கொட்டிக்கொடுத்து அதிசயிக்க
அரவணைத்து விடுகிறாயே!


தான் எனும் நிலைமறந்து,
தேனாகி உன்னை உயிரோடு கலந்து,
கலவிக்குள் குலவி,
கவிதைத்தேன் கொடுத்து,
இன்பத் திணறலைத் தருகிறாயே!
துருவித் துருவிப் பார்க்கிறேன்!
திகைப்புத்தான் பதிலாகி வருகிறது!


அது என்ன!
மாது உன் மனதிற்குள் அத்தனை மதுமலர்ச்சி!!
புதுமலராகும் மலர்வனமாகும்,
சுகந்த நறுமணமாகும் உன் உணர்வுகள்,
சுதிராகம் மீட்டுகின்ற விந்தை!
மீட்டிவிடும் விரல்கள் மீட்டிவிட,
"மீட்டு! மீட்டு!" என்று,
இன்னும் மீட்டிவிடத்துடிக்கும் வண்ணம் செய்கிறாயே!
கூட்டிவிடும் சுகமாகிறாயே!
கன்னம் கன்றிவிடும் நாணம் கொண்டுவிட
இன்னும் கவிதையுடன் கதைகள் உண்டே!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்
16-8-௨௦௦௫


"இதயம் எழுதும் மடல்" (4)


30-06-2005
"இதயம் எழுதும் மடல்" (4)

"நித்திரைமேகங்களின் சித்திரக் கோலங்கள்!"
--------------------------------------------------------------

உயிருக்குள் உணர்வோடு இணைந்திருக்கும் தென்றலே!

இது என்ன மர்மம்!
மதுமலர் உன் மனமலர்வில் இணைந்து,
மதி காலைப்பொழுதிற்குள் தனைமறந்து,
தன்நிலை மறந்து,
சுதி இராகமதை இணைத்து,
சுகந்தம் உன் உணர்வுக்குள்
சதிராடும் போதில்,
ஒரு சந்திப்பு!
இரு உணர்வுகள்
ஒன்றுக்குள்
புதிர்போடும், பதில் பிணைப்பு!
அதிகாலைப் புதிர்த்தித்திப்பு!

உன்மதுவிதழ் திறந்து,
மெதுவாக ஓர் தென்றலின்
இதமானமென்வருடல்!
மின்காந்தம்
உயிர்பாய்ந்து உயிர்கலந்த
அன்பான வருடல்!
முழுநிலா முற்றமதில் முழுவதுமாய்,
உன்நிலை மறந்த ஓர் தழுவல்!
தழுவலின் தென்றல்!

என்நிலை மறந்து
"என்னடி என்செல்வமே!" என்கின்றேன்!
'என்நிலை என் உயிர் மூச்சு சொல்நிலை
சொல்வது தெரியலையா!" என்கிறாய்!
"தெரிகிறதடி! தெரிகிறதடி!
புரிதல்இல்லாத உணர்வுகளா இப்படிப் பேசுகிறது!
விரிதல், மன விரிதல்,
வானத்தில் வானம்பாடிகளாய்,
புரிதல் புணர்தல்,
பூம்புனலாய் இன்பம் பெருகி ஒன்றாய்
தெரிதல்!
அது தானே உணர்தல்!
இதுதானே காதல்!
"புரியலையா" என்றால் என்னடி இதன் அர்த்தம்"
என்றேன்!

"புரிந்திருந்தும் ஏன்மௌனம்?
நான் படும்பாடு தெரிந்திருந்தும்,
விரிந்திடும் ஆசைகள் தெரிந்திருந்தும்,
ஏன்மௌனம் அத்தான்!
வருந்திடும் நிலைகள்,
வருத்திடும் நிலைகள்,
உங்களை
வருத்திடும் கவலைகள், தெரிந்திடலாமோ?
நான் தெரிந்திடலாகாதோ?
புரிந்திருந்தும்,
எனை நன்றாய்ப் புரிந்திருந்தும்
பின் ஏன் மௌனம்?"
என்றாய்!

மௌன விழிப்பார்வைக்குள் அர்த்தம்,
அது ஆயிரம்
மலர்களின் மௌன மலர்யுத்தம்!
பித்தத்தில் சித்தத்தைக் குளிரவைக்க,
மௌனமாய் இதழ்இசைத்து,
" ம்..உன் அன்புக்குள்,
அரவணைப்புக்குள்
மௌனமாய்
மோதும் பார்வைக்குள்,
மோதும் ஆசைகள் கோடியடி! மனம்
மௌனமாய் ஊறும்,
இன்ப உயிர் ஓசைகள் ஓடிவந்து,
நாடிநரம்புகளை, இனிமையாய் மீட்டுதடி!

தனிமையாய்
தவித்திருந்த நிலைமாறி,
இனிமையாய் இன்பம் கூட்டுதடி!
வனிதை உன் வரவில்,
இதயம்
இனிமையாய் துன்பம் போக்குதடி!
நீக்கமற உனக்குள்ளே,
இனிமையாய்
மீட்டுகின்ற வீணையாய்,
ஏக்கமுடன் நீ இணைகையில்,
இனிமையாய்
கூட்டுகின்ற வனிதையாய்,
என்னோடு நீ இருக்கையில்,

எனக்கேது கவலையடி!
கவலைகள் தொலைந்ததடி! கவிதையாய்
எனக்காக உனைத்தந்து
உயிர்கலந்து இருக்கையில், இனி
எனக்கேது கவலையடி!"
என்றேன்!
தென்றலாய் உனை வருடி,
எனக்காக,
எனக்குள்ளே இருக்கின்ற உனை மருவி,
இதழ் பருகி,
எனக்கேது
தடையென்ற உரிமையினால்,
உன்னிதழ்த் தேன் பருகி,

இசைத்தேன்!
இனிமையாய் நீ இசைந்து
என்மார்போடு தவழ்ந்தாய்!
"இதைத்தான்
வனிதைநான் நினைத்தேன்!
என் இதழ்த்தேன் தனைத்தான்
அத்தான், நான் தரத்தான் துடித்தேன்!
தயக்கம் என்ன! என்னிதழ்மது
அத்தான்!
அது என்றும் உங்களுக்கே அத்தான்!"
என்று இதமாக இதழ்பதித்தாய்!
முத்தான
உன் உயிர் கலந்த
முத்தங்கள் பித்தாக்க,
முழுநிலவு குளிர்சேர்க்க,

"இத்தனை நாள் எங்கிருந்தாய்!
என்நிலவே! இத்தனை நாள் எங்கிருந்தாய்!
அத்தனை சுகங்களையும்,
சுகந்தமாய் நிறைக்கின்ற
என்முத்தழகே!,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
சத்தமில்லாத சங்கீத ஸ்வரங்களாய்,
அத்தனை சுகங்களோடு,
பொங்கிவரும் கடலோடு,
சங்கமிக்கும் முத்தாக,
இத்தனை நாள் நீ எங்கிருந்தாயடி!
என்செல்வமே!" என்றேன்!

"அத்தனையும்
உங்களுக்கு ஆசையாய்ப் படைப்பதற்கே,
இறைவன்
இத்தனைநாள் மறைத்திருந்தான்!
மொத்தமாய் உங்களுக்கே!
அத்தான்!
அத்தனையும் எடுத்து,
சுகம் உங்களுக்குள் சேர்த்திடுங்கள்!" என்றாய்!
இத்தனைநாள்
காத்திருந்த சுகந்தமிவள் சேர்த்துவைத்த
முத்துக்கள் இவை!
அத்தனையும்
கோர்த்து அன்பு மேனிக்குச் சூட்டிடுங்கள்!
உங்கள்

சொத்து இவை" என்றாய்!
ஒன்றாய்
உயிர்கலந்த
மூச்சுக் கலவி
முத்து அதன் வாய் திறக்க,
மௌனம்
சம்மதமாய் இதழ்விரிக்க,
கொத்துக் கொத்து அதாய்,
தேக்கி வைத்த முத்தங்கள்,
காதல்
பித்துக்குள் புகுந்துகொள்ள,
இதமாக இழுத்தணைத்து,
அழுத்தங்கள்
முத்து அதன் வாய் திறக்க,
முத்தான முத்தங்கள், முத்து முத்தாய்த்

தடம்பதிக்க,
பித்தாகிப்போனோம் நாம்!
முத்தாகி, வெயர்வை முத்துக்கள்
உடல் கொதிக்க,
தென்றல்
தெம்மாங்கு பாடியதன் கொதிப்படக்கி,
உடல் தழுவ,
இடம்பிடித்த இன்பங்கள்,
பொங்கி வழிந்திருக்கும் சுகந்தங்கள்,
மடல்விரித்த,
உன்மௌன விழி படித்த பாடங்கள்,
கடல்நிறைக்கும்!
மடல் விரிக்கும், இணைந்த காதற்பாடங்கள்!
கடல் மை கொண்டு வரைந்தாலும்,
இடம் போதாத தாள்வானம்!
அது நீள் நித்திரைமேகமதன் சித்திரக் கோலங்கள்!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!

நன்றி
சுபம்
--------- அன்புடன்
ஆதித்ததாஸன்.
30-06-2005
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3083&hl=

"இதயம் எழுதும் மடல்" (3),


25-06-2005 -------
"இதயம் எழுதும் மடல்" (3)
"தனிமைக்குள் இனிமை"
----------------------------------
இனிமையுள்ள இதயமே!

இனியென்ன கவலை உனக்கு!
கனியமனம் கனிந்து வந்து கவிதைமழை பொழியும்போது,
தனிமையுள்ள நிலையில்கூட தழுவிவரும் இளந்தென்றல்,
தருகின்ற சுகந்தம் நிறைந்து வழியும்போது,
வனந்தனில் தனித்திருந்தாலும் இனித்திருக்கும் இனிய சுகந்தம்,
நிறைத்திருக்கும் இனிமை வசந்தம்!
மனந்தனில் மகிழ்வு மலர்ந்துவிடும் தனிமை வசந்தம்!

தனித்திருக்கும் மனதில்,
துணையன்பு இணைந்திருக்கும் நிலையில்,
பனித்துளியில் மனந்தான் இலயித்திருக்க,
கனிந்திருக்கும் கணங்கள்,
இனிமை இணைந்திருக்கும் சுகங்கள்,
நினைத்திருக்க நினைத்திருக்க,
இனித்திருக்கும் இன்பம்,
என்றும் தனிமை உணர்த்திவிடும் வசந்தம்!
வாழ்வில் வரவில் வைத்திருக்க,
தனித்திருக்கும்,
தனித்திருந்து இரசித்துவிடும்
நினைவுத்தென்றல் தழுவிடும் வசந்தம்!

மனந்தனில் மனதோடு மருவிநின்று
மௌனமொழி தினம் தினம் பேசிவிட,
இனம்புரியாத இனிமை,
கனந்தரும் இதயம்கூட கரைந்து,
கனம்தொலைந்து,
மனம் மகிழ்கின்ற தனிமை தருகின்ற இனிமை,
என்றுமே வாட்டம் ஓட்டிவிடும்,
நன்று காட்டிவிடும்
மனம் ஒன்றாய் கூட்டிவரும் இனிமை,
வென்றுமே, இளமை வென்றுமே,
ஒன்றாய்ப் பாட்டிசைக்கும் தனிமை,
என்றுமே இயற்கை அளித்துவிடும்இனிமை!
உனக்குள் உணர்வில் உயிரில் ஒன்றாய்க் கலந்திருக்கும் தனிமை!

நன்றி
சுபம்!
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
25-06-2005..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3066&hl=