சனி, 30 மே, 2009

ஏனிந்த சோகம்.


அழகிய உன் காந்த
விழிக் கண்களில்,
பழகிய காலங்கள்,
இழகிய மனதோடு நீ,
பழகிய காலங்கள்,
நீந்துகின்ற விண்மீனாய்,
அழகிய உன் சாந்தவிழிகளில்,
சேர்ந்திருக்கும் சோகமென்ன!

இழகிய இதயத்தில்,
இனிமைகள் தழுவிடும் உதயத்தில்,
பழகிய இதயம், தனிமையைத்
தழுவிடும் இதயம்-தன்
உளவியல் பாடத்தைக்
கற்பித்த காட்சிதானோ!
களவியல் வேடத்தைக்
கலைத்திட்ட சாட்சிதானோ!

"இழகிய மனங்கள் என்றுமே
சோகத்தைத் தழுவும்" என்று
பழகிய தினங்கள், ஒன்றாய்
மோகத்தைத் தழுவிய கணங்கள்-உந்தன்
அழகிய மனத்தில், நன்றாய்
விதைத்திட்ட கோலந்தானோ!
பழகிய மனத்தில், ஒன்றாய்ப்
பழகிய மனத்தில், வந்த பிரிவினால் சோகந்தானோ!

அழகியுன் சீர்குலைத்த,
அந்தகன் யாரோ பெண்ணே!
பழகியுன் வேர் அறுத்த,
மந்தகன் யாரோ பெண்ணே!-உன்
இழகிய மனத்தைக் கண்டு,
இரக்கத்தின் நிலையைக் கண்டு,
அழகிய வனப்பைச் சிதைத்த,
அரக்கன்தான் யாரோ பெண்ணே!

பழகிய நிலைகள், உன்னைக்
கொல்வது புரிகிறது!
இழகிய நிலைகள், தன்னைத்
துரத்திட, தொல்லைகூட்டிட,-உன்
அழகிய கண்களில், நீர்த்திவலைகள்
சொல்வது தெரிகிறது!
பழகிய பண்பில்லாக் கயவனை மறந்திட்டு,
உலகியல் தன்மையை நீ உணர்ந்திடு!

இழகிய மனத்தினில், இதயத்தைக்
கசக்கிடும் நிலைகளைக் களைந்திட்டு,
அழகிய உலகத்தில், உதயத்தைக்
கண்டிடும் நிலைகளைத் தேர்ந்தெடுத்து,
அழகிய மனங்களை, உதவிடும்
மனங்களை, அறிந்து உன் உதவி,
இழகிய மனங்களைச் சேர்ந்திட, தினங்களை
வரவிட, உன் இதயத்தைத் திடப்படுத்து!

அழகிய உலகமிது! அழகில்லா
மனங்களால், சிதைபடும் உலகமிது!
இழகிய மனங்கொண்டு அரக்கரைப்
பார்க்காதே! உன் இரக்கத்தை,
இழகிய மனங்களோடு இனிமையாய்ப்
பகிர்ந்து விடு! அழகிய உலகம்-உன்
அழகிய கண்களில் தெரியும்!
அழகோடு அழகாய் உலகத்தை நீ அழகாக்கிவிடு
!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக