சனி, 30 மே, 2009

சேதி சொல்

ஆதி வந்த மனித இனம்
பாதிவழி தாண்டுகையில்
மீதி மந்த மிருக மனம்
நீதிவழி தாண்டியதே!

சேதி சொன்ன கவிமனதின்
பாதி உயிர் பிழிந்தெடுத்து
சாதி சனம் பிரித்தெடுத்து
நாதி இன்மை யாக்கியதே!

போதி மரப் புத்தனும்
நீதி சொன்ன தத்துவங்கள்
வீதி தன்னில் விழி பிதுங்கி
நாதி யற்று நிற்கிறதே!

"ஏதிவனும் புலம்புகிறான்
பாதிவிழி அலம்புகிறான்" என்று
மாதிவளும் விழிபிதுங்குகையில்
மீதிவழி யாதோ! மீண்டிடுவான்தானோ!

ஆதிவந்த மனிதமனம்
நீதி கண்ட நெறிமுறைகள்
நாதியுடன் நிமிர்ந்திடுமா!நல்ல
சேதி வந்து செவி சேர்ந்திடுமா!

போதி மரப்புத்தன் திரும்பிடுவானோ!
நாதி யற்ற மனங்கள் நலம்பெற்றிடுமோ!
சேதிசொல் தாயே! தரணித் தாயே!
நீதியற்ற நிலைமாற்றி நிம்மதிசேர்ப்பாயே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9058&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக