சனி, 30 மே, 2009

கலையான கண்மணியே!

கவிதையே! கவிதாவே!
காவியமாய் ஆனவளே!
செவியோடு இதழ்மருவி
பாவிதழால் பகர்வாயே!

கவியாவும் நீயாக புவி
கவிபாடும் கவிஞனிவன்
கவிக்காற்றோடு பேசுகின்ற
கவியிதனை அறிவாயோ!

நேற்றுவரை நினைவுகளை
நேர்த்தியுடன் மீட்டியவன்
காற்றுலகில் கனவுலகில் உன்
கீர்த்திதனைப் பாடுகின்றான்!இவன்

ஊற்றிவரும் உணர்வுகளைப்
பார்த்திருப்பாய்! சேர்த்திருப்பாய்!நீ
போற்றுகின்ற பாட்டாவாய்!
சேர்த்துவைக்கும் கூட்டாவாய்!

கார்த்திகை மாதத்துப்
பனிபோலும் பாவையே!
நேர்த்தியுடன் நிறைந்துவிடு!
இனியாவும் புலர்பொழுதே!

சீர்தனங்கள் புன்சிரிப்பாய்
ஊர்தினமும் மெச்சிடவே
பார்புகழ வைத்திடுவாய்!
பார்திகழும் பார்வையே!நீ!

ஏர்பிடிக்கும் உழவன்போல்
கவிவடிக்கும் கவிமனதில்
நீர்நிறைத்து மகிழாயோ!
கவிமதி நிறைத்து அருளாயோ!

கவிதையே! கவி தாயினியே!
கலைவாணியே! கவி ராணியே!
கவிதையாய்க் கை தவழ்வாய்!
கலையாகி வா கண்மணியே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக