திங்கள், 1 ஜூன், 2009

"இதயக்கவித் திருடியே!"


கண்ணாடி
காட்டவில்லையா!உன்
முன்னாடி
உனைக் காட்டவில்லையா!கவிக்
கண்ணாடி
காட்டிக்கொடுக்குமே!திருட்டு
முன்னாடி
உனைக் கூட்டிக்கொடுக்குமே!

கண்ணாடிபோல்
என்மனக்கவிதை உன்
முன்னாடி உனைப்
படம்பிடித்துக்காட்டுமே!நிலைக்
கண்ணாடி முன்
நின்று நீ பார்க்கவில்லையா!
முன்னாடி உன்
திருட்டு எதுவென்று கூறவில்லையா!

"பெண்ணாடி! நீயும்
ஒரு பெண்ணாடி!" என்று
உன்நாடி உதிரம்
கூறவில்லையா"!தென்றல்
பெண்ணாடி நீ!
இல்லைத் தீப்புண்ணாடி நீ!"என்று
உன்நாடி உளறும்
உனைக் கேட்கவில்லையா!

மண்நாடி உன்னுடல்
போகுமுன் உன்மனக்
கண்ணாடி பேசாதோ
பலமுறை! "நீ
பெண்ணாடி!" என்று
உலகொருமுறை உன்மனக்
கண்ணாடி தனைத்
திறந்து கேட்காதோ!

கேட்குமே! கேட்குமே!
என்செவியில் செய்தி
கேட்குமே! பார்க்குமே!
உலகம் பார்க்குமே!புலவன்
கேட்கும் கேள்விதனைப்
பலமனங்கள் கேட்குமே!
கேட்குமே! கேள்விகேட்குமே!
புலவன் வாக்குப் பலிக்குமே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக