செவ்வாய், 2 ஜூன், 2009

"நல்வரவு"


அகரத்தில் ஆரம்பம்!
அருந்தமிழ்ப் பேரின்பம்!
சிகரத்தில் சேரின்பம்!
நறுந்தமிழ்ப் பாரின்பம்!

சிகரத்தில் சித்திரையாள்
இருந்திடும் இத்திருநாள்
உகரத்தில் உத்தமமாய்
விரும்பிடும் முத்திரைநாள்!

அகரத்தில் அகிலமகள்
அருந்தவங்கள் நிறைத்திடவே
உகரத்தின் உச்சமதாய்
வருந்தினங்கள் உயர்ந்திடவே

சிகரத்தில் வைத்திடுவாள்!
வருந்துயர்கள் நீக்கிடுவாள்!
உகரத்து உயிர்களெல்லாம்
விரும்பிடும் நல்வளம் தருவாள்!

வருக நல் சித்திரையே!
தருக நல் சித்தியையே!
மருவும் நல்முத்திரையாய்
மருவும் நல்சித்திரையே!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக