செவ்வாய், 2 ஜூன், 2009

"வாழ்க்கை!"


"இதுவரை வாழ்க்கை
இன்னும் எதுவரையோ!" என்று
மின்னும் அதுவரை நாட்கள்
நகர்ந்திடட்டும்!இதயம்
"அதுவரை" என்று
தொடர்ந்திடட்டும்!

புதுவித மலராய்
புதுமைகள் நிறைவாய்
மதுமலர் மனமாய்
நிறைந்திடவே இதயம்
புதுமைகள் நிறைக்க
புரட்சிகள் பிறக்க
புதுவித சுகங்கள்
நிறைத்திடட்டும்!

நதிமன ஓடம்
விதிவழி ஓடும்! இதயம்
சுதிநயம் பாடும்!
சதிர்விளையாடும்!இறைவன்
கதியென நாடும்!
இனிமைகள் பாடும்!உலகம்
மதிநயம் பாடும்!
தனிமைகள் ஓடும்!

மதிதனை வளர்ப்பாய்!
மகிழ்வினை நிறைப்பாய்!
எதிர்நிலை அறிந்து
புதுயுகம் படைப்பாய்!உன்
விதிதனை அறிவாய்!
விதித்தவன் அறிவான்!நீ
மதிதனை வளர்த்து
விதிதனை ஜெயிப்பாய்!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக