செவ்வாய், 2 ஜூன், 2009

"மலர்ந்தாள் இன்று!"

அழகான அதிகாலை!
வளமாக புலர்காலை!
அழகாக மலர்த்தென்றல்!
அழகான கதிர்த்தைத்திங்கள்!

அழகுடனே புன்னகைதவழ
பழகுதமிழ் பைந்தேன்மொழியாள்
அழகுநடை போடுகின்றாள்!"மொழி
அழகுதமிழ் ஈழநங்கை பிறந்தாள்!" என்று!

அழகுதமிழ்க் கரம்பற்றி
பழகுதமிழ்ப் பாவலனும்
அழகுகவி மலர்ச்சரம்தொடுக்க
அழகுபுவி மலர் வரம் ஈந்தாள் இன்று!

அழகு நிறைக்கதிரவனும்
உழவு செய்வோர் மனங்குளிர
அழகுநிறை நெற்கதிர்களதாய்
உழவுபுவி சேர்த்தான் நன்று!

உழவுமனம் உதிர்க்கின்ற
அழகுநிறை நன்றிப்பெருக்கில்
உழவுபுவி நனைகிறது!அன்பின்
அழகுஅதில் நன்கு தெரிகிறது இன்று!

தைமலர் மலர்ந்தாள் இன்று!
தைமகள் குளிர்ந்தாள் இன்று!
தைபிறக்க வழிபிறக்க கவித்
தைசிறக்க ஒளிநிறைத்தாள் இன்று!

வாழ்கவே! வளர்கவே! வளம்பெறுகவே!
சூழ்கவே! சுகங்கள் நிறைகவே! தைமலர்ந்தாள் இன்று!

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக