செவ்வாய், 2 ஜூன், 2009

"அவள்!"

இளகிய மனதினில்
இளமையின் இரகசியம்!
பழகிய மனதினில்
பழமையின் புதுசுகம்!

இளமயில் நடையினில்
குளுகுளு கவிதைகள்!
இளவெயில் இடையினில்
தழுவிடும் குளிர்மைகள்!

பழகிட பழகிடப்
பழமுதிர்ப் பாகுகள்!
இழகிட இழகிட
இழந்திடும் இரவுகள்!

அழகினில் அழகது
பழகிடும் பொழுதுகள்
இழந்திடும் போதினில்
வளர்ந்திடும் கனவுகள்!

இளநிறச் சிவப்பினில்
வளர்நிறைச் சிரிப்புகள்!
இளநீர் வார்ப்பினில்
களர்நிலக் களிப்புகள்!

குளம்நிறை சுகங்கள் என்
இளமயில் நளினங்கள்!அவள்
வளம் நிறைத்திங்கள்! என்னிதயக்
குளம் நிறைத் தினங்கள்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக