திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்" ( 1), "கவிதை சொல்


1-07-2005. ----------------------
"கவிதை சொல்லும் கனவு!"
-------------------------------------------
கவிதையின் கவிதைக் கண்மணி சுகந்தமே!

காவியத்தில் இல்லாத
கனிமை! இதய உதய
ஓவியத்தில் இல்லத்தில்
அன்பின் ஒளிர்மை!

தாவிவரும் தேன்தமிழாய்,
தழுவிவரும் இளந்தளிராய்,
மேவிவரும் வான்நிலவாய்,
வருடிவிடும் இளங்குளிர்மை!

நீவிவிடும் தலைமுடியை நீ
கோதிவிட்டுக் கண்விழியால்,
மேவிவரும் உன்பார்வை,
கோர்த்திருக்கப் பலகேள்விக்கணைகள்,

து}விவிடும் துளிப்பனியாய்
தழுவியெனைத் தொடுத்திருக்க,
தாவிவரும் தளிர்க்கூந்தல்,
தவழ்ந்து சுகம்சேர்த்திருக்க, இதழ்

மேவிவரும் தேன்துளிகள்
இணைந்து அகம் துடித்திருக்க,
"காதல் சுகங்காணும் கவிதைக்கருதேடி,
மனக்கண்கள், அதன்

தேடல், யுகம் மறக்கும் நிலை தானோ?
கூடல் சுகம் காண,
காதல் கலவி சுகம் சேர்க்க,
கண்கள் சொல்லும் கவிகூட,

பாடல் சுகம் காணும் நேரம் இதுதானோ?..
போதும் இனித்தேடும்
தேடல் சுகம் காண்போம்!
வாடல்தனைப் போக்கி இதயத்தேடல்

கூடிவர, நாடிவரும் சுகம்
நாடிநமை அழைக்கிறதே! நாம்
நாடிவரும் சுகங்களை,
நாடிவிட என்ன தடை! விடை

தேடிவர, நாம் வெகுநேரமதை
வீணாய்க் கழித்திடாமல்,
கூடிவரும் சுகநேரமிது! இன்பம்
தேடிவரும் சுபநேரமிது!

பாடிவர தெம்மாங்கு இதமாகப் பாடிவர,
மீட்டும் இன்ப வீணையிது!
நாடிநரம்புகளின் துடிப்பறியும்
படிப்பாளர் நீங்கள்! இந்தப்

பாடிவரும் பைங்கிளியின்
துடிப்பறிய முடியலையா! சுகந்தமிதை
சூடிவிடத் தோணலையா? விரகதாபம்
தீர்த்துவிடத் தோணலையா!

கூடிவிடத் தென்றல் தவழ்ந்து
சுதிகூட்டிறதே! விரல் மீட்டிவிட
நாடிநிற்கும் வீணையிது! மீட்டுங்கள்!
சுகராகம் கூட்டுங்கள்!

ஒன்றாய், உயிரோடு
உயிரொன்றாய் இணைந்தபின்,
ஒன்றுசேர இன்னும் என்ன தடை?"
என்றபடி மடிசாய்ந்தாய்!

"நன்றாய் சொன்னாயடி!..
ஒன்றாய் உயிர்கலந்த, உண்மையன்பு
என்றாகிவிட்ட பின்பு,
தயக்கமென்பதேது! உன்விழிகலந்த அன்பு

வென்றாகிவிட்ட பின்பும்
தயக்கமென்பதேது! தழுவி உன்னை
தென்றலாய் அணைப்பதற்கு,
தயக்கம் என்பதேது..நெஞ்சம் என்ற

மன்றமதில், உனை அணைத்து சுகம் கொடுப்பதற்கு,
தயக்கம் என்ன உண்டு!
அன்றலர்ந்த மலர்உன்னை,
தென்றல் இவன் வருடி, சுகம் கொடுத்து,

ஒன்றக்குலவி விட,
இன்று என்ன தயக்கமடி! நன்றடி! நன்று!
உண்டுவிட, தேனை ஊற்றி நீ கொடுத்துவிட,
அன்றலர் மலர் உன்

செண்டு முகம் வருடி,
உண்டு இன்பம் பருகிவிட, அன்புமழை பொழிந்து,
"உண்டு, இகம் இந்த இன்பம்,
உயிர்கலந்து கொண்ட இன்பம்", என்று

கண்டுவிடும் மனங்கள் இவை!
இதழ்க் கவிதை சொல்லிவிடும் மிகுதி இதை!
கண்டு விடும் சுகந்தங்கள்
காத்திருக்கும் இன்பசுகந்தங்கள்,

உண்டு! இன்னும் உண்டு பல!" என்று,
உன் விழிமருவி, உன் இதழ்த்தேன்
உண்டு, கன்னம் சிவந்துவிட கன்றிவிட,
இதழ்முத்தங்கள் ஒன்றிவிட,

கண்டு வரும் கவிதைசுகம் உண்டு,
இன்னும் உண்ண உண்ண,
நன்று! நன்று! ஒன்றாய்
வென்று விடும் இளமை சுகம்,

நன்று! இன்று, நாம் ஒன்றாய்
தென்றல் வளம் சேர்க்கும்
இன்று, நன்று அடி பெண்ணே! நாம்
ஓன்று சேரும், இன்று

நன்று! என்றும் இன்றுபோல் நாம்
ஓன்றாய் சேரும், சுகம்
என்றுமே நன்றடி!" என்று உனைத்தழுவி,
உயிர்கலந்த மூச்சில்

நன்றாய் முத்தங்கள்,
உடல்மொத்தமாய்ப் பதித்தேன்! முத்தங்கள்,
நன்றாய் சித்தங்கள் குளிர,
மொத்தமாய் அத்தனையும் பரிமாறி,

"என்றுமே இதுவேண்டும்"
என்று நீ இதழ்முணுமுணுக்க,
"வருமடி! காலம் கனிந்து இன்னும்
வருமடி! என்றும் உன்

திருமடி சாய்ந்து
சேர்ந்து கொண்டு கதைபடிக்க,
வருமடி! காலம் கனிந்து இன்பம்
தருமடி!" என்று

திருமடி சாய்ந்தேன்! தென்றல்
சுகந்தமாய் சுகந்தம் நீ,
"கருமணியாக காத்திருப்பேன்!
கண்மணியாகப் பார்த்திருப்பேன்!

பெருநிதியாக நினைத்திருப்பேன்!
உங்கள் அன்பை,
வருநதியாகச் சேர்த்திருப்பேன்!
பொங்கும் சுகங்களாய்,

அருமதியாகக் குளிர்
சேர்த்திருப்பேன்" என்றாய்!
அருமருந்தான உன்
விருந்து வாயமுதம் சிந்திய,

பெருவிருந்தான உன்இதழ்
விரித்த சுகம்சேர்க்க,
அருவிருந்தாக உனை
அரவணைத்து, அதரம்பதித்து,

வருவிருந்துக்கு வரவுவைத்து
வருடிவிட, மருவிவிட,
"அருமலர்ந்த அந்தப் பொழுது புலர்ந்ததே" என்று
அருமலர் உன்அதரம் அசைந்து இசைத்துவிட,

அருபுலர்ந்த அந்த
அதிகாலைப் புலர்பொழுது,
அருமருந்தான அந்த
விருந்து தந்த சுகத்தோடு,

இகம்மறந்தோம் நாம்!


நன்றி
சுபம்
---------
மறுமடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஆதித்ததாஸன்.
1-7-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3041&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக