திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்"! (5)

16-8-2005
----------
"இதயம் எழுதும் மடல்"! (5)

"வசந்தத்தில் ஓர் நாள்!"
-------------------
அன்புக்குள் சுகம் காணும் சுகராகமே!

அது என்னவோ,
உன் மனது பாடும் சுகந்த ரதம்,
எனது மனதில்
புது வசந்த ராகம் இசைத்து,
இதமாக பதமான புதுமைத் தென்றலைநிறைத்து,
பாடி வர,
எனையறியாமல் உனது மனதோடு பின்னிப்பிணைத்து,
இணைத்து இனிமைதர,
எனது கணப்பொழுதுகளையும் குவித்து,
கவி புனைய யுகப் பொழுதுகளும்,
கரைந்த கணப்பொழுதாய் மறைகிறதே!


"ஏன்" என்ற கேள்வி எழுந்தாலும்,
பதில் சரமாக புதிரதன் பதிலாய் சுதிராகம் இசைக்கிறதே!
ஏன்! உன் உயிருக்குள் காதல் பயிர்வளர்த்து,
தன்னிலை மறந்த
தேன்மலரேந்தும் மதுவாக,
தேனை அள்ளிச் சொரிந்து,
வாரி வழங்கிடத் துடிக்கிற உள்ளமாகி,
வெள்ளமாக இன்பவெள்ளமாக,
மனம் துள்ளித் துடித்து இதழ்வடிக்கிறதே!


வடிக்கின்ற தேனை,
அள்ளிக் குடித்துவிடத் துடிக்கின்ற தேன்இதழ்கள்,
இதமாக
பதமாகித் தழுவி வருடிக் கணப்பொழுதினையும்
வீணாக்காமல்,
வீணையாய் சுருதி மீட்டுகின்ற விந்தை
என்னடி பெண்ணே!
அத்தனையும் கொட்டிக்கொடுத்து அதிசயிக்க
அரவணைத்து விடுகிறாயே!


தான் எனும் நிலைமறந்து,
தேனாகி உன்னை உயிரோடு கலந்து,
கலவிக்குள் குலவி,
கவிதைத்தேன் கொடுத்து,
இன்பத் திணறலைத் தருகிறாயே!
துருவித் துருவிப் பார்க்கிறேன்!
திகைப்புத்தான் பதிலாகி வருகிறது!


அது என்ன!
மாது உன் மனதிற்குள் அத்தனை மதுமலர்ச்சி!!
புதுமலராகும் மலர்வனமாகும்,
சுகந்த நறுமணமாகும் உன் உணர்வுகள்,
சுதிராகம் மீட்டுகின்ற விந்தை!
மீட்டிவிடும் விரல்கள் மீட்டிவிட,
"மீட்டு! மீட்டு!" என்று,
இன்னும் மீட்டிவிடத்துடிக்கும் வண்ணம் செய்கிறாயே!
கூட்டிவிடும் சுகமாகிறாயே!
கன்னம் கன்றிவிடும் நாணம் கொண்டுவிட
இன்னும் கவிதையுடன் கதைகள் உண்டே!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்
16-8-௨௦௦௫


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக