திங்கள், 3 ஆகஸ்ட், 2009

"இதயம் எழுதும் மடல்" (3),


25-06-2005 -------
"இதயம் எழுதும் மடல்" (3)
"தனிமைக்குள் இனிமை"
----------------------------------
இனிமையுள்ள இதயமே!

இனியென்ன கவலை உனக்கு!
கனியமனம் கனிந்து வந்து கவிதைமழை பொழியும்போது,
தனிமையுள்ள நிலையில்கூட தழுவிவரும் இளந்தென்றல்,
தருகின்ற சுகந்தம் நிறைந்து வழியும்போது,
வனந்தனில் தனித்திருந்தாலும் இனித்திருக்கும் இனிய சுகந்தம்,
நிறைத்திருக்கும் இனிமை வசந்தம்!
மனந்தனில் மகிழ்வு மலர்ந்துவிடும் தனிமை வசந்தம்!

தனித்திருக்கும் மனதில்,
துணையன்பு இணைந்திருக்கும் நிலையில்,
பனித்துளியில் மனந்தான் இலயித்திருக்க,
கனிந்திருக்கும் கணங்கள்,
இனிமை இணைந்திருக்கும் சுகங்கள்,
நினைத்திருக்க நினைத்திருக்க,
இனித்திருக்கும் இன்பம்,
என்றும் தனிமை உணர்த்திவிடும் வசந்தம்!
வாழ்வில் வரவில் வைத்திருக்க,
தனித்திருக்கும்,
தனித்திருந்து இரசித்துவிடும்
நினைவுத்தென்றல் தழுவிடும் வசந்தம்!

மனந்தனில் மனதோடு மருவிநின்று
மௌனமொழி தினம் தினம் பேசிவிட,
இனம்புரியாத இனிமை,
கனந்தரும் இதயம்கூட கரைந்து,
கனம்தொலைந்து,
மனம் மகிழ்கின்ற தனிமை தருகின்ற இனிமை,
என்றுமே வாட்டம் ஓட்டிவிடும்,
நன்று காட்டிவிடும்
மனம் ஒன்றாய் கூட்டிவரும் இனிமை,
வென்றுமே, இளமை வென்றுமே,
ஒன்றாய்ப் பாட்டிசைக்கும் தனிமை,
என்றுமே இயற்கை அளித்துவிடும்இனிமை!
உனக்குள் உணர்வில் உயிரில் ஒன்றாய்க் கலந்திருக்கும் தனிமை!

நன்றி
சுபம்!
மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
25-06-2005..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3066&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக