திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (2)


22-06-2
---------------------
"கனாக்காலக் கார்காலக் கவிதை!"
-----------------------------------------------

கண்களுக்குள் மனக்கண்களுக்குள் சதிராடும் சுதிராகமே!

மதிராகம் மனதோடு மனம்போல தினம்பாட,
கனமான இதயமதை இதமாக
மயிலிறகால் மருவி வருடிவிட,
தினம் தினம் கணம் கணம் கனவுக்கதவுகள்,
உன்வரவை எதிர்பார்த்து
ஏக்கத்துடன் காத்திருந்து வரவுவைக்க,
இரவுகள் இனிமையாய் உறவுக்குப் பாய்விரிக்க,

கண்களுக்குள்
கனிமொழி உன்கனவு கவிதை காணும்!
கலவிக்குள் குலவிக்கொள்ள,
மனப்புண்களுக்கு இதமாக
உன்கனவு ஒத்தடம் கொடுக்கும்!
மெத்தனவே இளமை
மெதுவாக விழித்துக் கொள்ளும்!
விழித்துக்கொள்ளும் விழிகள்
வழிமொழியும் தென்றல்,
மெதுவாக மலரணையாய் சுகமான சுகம்சேர்க்கும்!

கண்களால் கவிதைபாடி
கவிதையாய் சரமாகி,
ஈரமான இரகசியம்
இரகசியமாய் சரசத்தின்
சாரீரம்,
சாமரம் வீசுகின்ற தென்றலோடு
உயிர் ஒன்றிவிடும் சாகஸம்!
என்றுமே காதல் உயில்
உயிருக்குள் கார்மேக மழைபொழிய,
காதல் பயிரோடு பயிர்,
பத்திரமாய் சித்திரமாய்
உயிரோடு உயிர் ஒன்று கூடிவர,
ஓடிவரும் கவிதையின் கவிதை,
அது கனாக்காலக் கார்காலக் கவிதையடி!

மீண்டும் மறுமடலில் சந்திக்கும்வரை

நன்றி
சுபம்
-------
அன்புடன்
ஆதித்ததாஸன்!
22-06-2005

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3056&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக