ஞாயிறு, 31 மே, 2009

"புரிந்திடு!" "இல்லைப் பொறுத்திரு!"

"சிரிப்பதா அழுவதா!"என்று மன
விரிப்பது தொடர்கிறது!இன்று மன
அரிப்பது சிலர்தனில் பார்க்கையில்
"சிரிப்பதா அழுவதா!" என்றது மனது!

"நரிக்குணம் சிலரில்! குள்ள
நரிக்குணம் சிலரில்! வெள்ளை
விரிக்கின்ற விரிப்பில் குள்ள
நரிக்குணம் சிலரில்" என்றது மனது!

எரிப்பதும் எரிப்பதில் துவள்வதும்
வரிப்பதும் வரிப்பதில் வலிப்பதும்
திரிப்பதும் திரிப்பதில் திரிந்தலைதலும் பார்க்க
"சிரிப்பதா அழுவதா!" என்றது மனது!

"உரித்திட நினைத்தால்
உரிந்திடும் சாயம்! நிலை
புரிந்திடா மனத்தில் புரிந்திடவைத்தால்
புரிந்திடும் வேஷம்" என்றிட நினைத்தால்

சிரிப்புத்தான் வருகுது!மன
விரிப்புத்தான் தொடருது!சிலர்
கரிப்புத்தான் தெரியுது! நச்சு
அரிப்புத்தான் புரியுது!

"அரிந்திடும் வாளா! இல்லைத்
தெரிந்திடும் பேனாவா! இவரை
உரித்திட உதவும்!" என்பதன் பதிலாய்
சிரிப்புத்தான் வருகுது!

தெரிந்திடும் வேஷம்! பொறுத்திரு!
வரிந்திடும் காலம்! காத்திரு!
புரிந்திடும் மோசம்! பொறுத்திரு!
உரிந்திடும் கோலம்! பார்த்திரு!

எரிந்திடும் வயிறு எரியட்டும்!
புரிந்திடும் மனங்கள் புரியட்டும்!
அரிந்திடும் எழுத்துக்கு உயிருண்டு!
புரிந்திடும் மனத்துக்கு உயர்வுண்டு!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8247&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக