ஞாயிறு, 31 மே, 2009

கார்த்திகைத் தீபங்கள்.


இதயத்தின் உணர்வுகளில்
உதயத்தைக் காட்டுகின்ற
இதயதீபங்களின் ஏக்கங்கள்!புதிய
உதயகீதங்களின் தாக்கங்கள்!

இதயவீணையின் நரம்புகளை
இதயதாபமுடன் மீட்டுகையில்
உதயசூரியனின் உணர்வலைகள்!இனிய
உதயகாலங்களைக் காட்டியதே!

இதயம் தாண்டி வந்துபேசுகின்ற
இதயநாதங்களின் முரசொலிகள்
புதியபாதைகளின் பயணங்களை உலகில்
புதிய பாடமதாய் புகட்டியதே!

"உதயம்" "உதயம்" என்ற உணர்வலையுள்
இதயம் நம்பிக்கை நிறைத்துவிடத் தர்மம்
விதியைவென்றுவிடும் விடைகளுடன் புதுமை
விதியை நன்றுசொல்லி விடிகிறதே!

இதய தீபங்கள் வாழ்கவே!நல்
விதையின் விளைவுகள் கூறவே!
இதயராகங்கள் இசைக்கவே விடியல்
இதயகீதமாய்ப் புலர்ந்ததே!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7620&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக