ஞாயிறு, 31 மே, 2009

"அருள் மலர் தைப்பாவாய்!"

ஆருயிர்த் தை மலரே!
பாருயர்த் திருமகளே!
நீருயர் வளங்களெல்லாம்
ஏருயர் நிலங்களெல்லாம்

சீருடன் சிறக்க வேண்டும்!
பாருடன் நிறைக்க வேண்டும்!மனம்
வேருடன் நிலைக்க வேண்டும்!தினம்
பாருடன் கலக்க வேண்டும்!

சீருயர் குணங்களெல்லாம்
பாருயர் மனங்களெல்லாம்
நேருயர் நிறைகள் சேர்க்க
பாருயர் குறைகள் தீர்க்க

வேருடன் நீரைப்போல மன
ஊருடன் இணைய வேண்டும்!அன்பு
நீருடன் நிறைய வேண்டும்!துன்பம்
வேருடன் களைய வேண்டும்!

ஆருயிர் அன்புவெள்ளம்
காரிருள் களை கதிர்போல்
பாரிருள் போக்க வேண்டும்!
சேருயிர் காக்க வேண்டும்!

போருடன் மமதை கொள்ளும் மனப்
போருடன் உயிர்கள் கொல்லும் பிணப்
போருடல் தின்னும் பேய்கள் சினப்
போருடல் மடிதல் வேண்டும்!

போரினில் மடிநல் மனங்கள் விழி
நீரினில் மிதக்கும் தினங்கள்
பாரினில் இனியும் வேண்டாம்!விழி
பாரினி! அருள் மலர்! தைப்பாவையே!


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8156&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக