வியாழன், 4 ஜூன், 2009

"திரைவிலகிடட்டும்!"

உழுகின்ற மண்ணில்
நீவிதைக்கின்ற விதைதான்
வருமென்ற எண்ணம் உன்னிடம்
உரைக்கின்ற வரைதான்!

எழுகின்ற எண்ணம் இதயம்
சிதைக்காத வரையில் நீ
வருமென்ற ஒன்று வந்து உனை
நிறைக்கின்ற வரைதான்!

அழுகின்ற மனமே! நீ
உதைக்கின்ற உதை உன்னிடம்
வருமென்ற ஒன்றை நீ
மறைக்காத வரைதான்!

விழுகின்ற காலம் நீ
விதைக்கின்ற கோலம்! அதைத்
தருமென்று என்றும் நீ
மறக்காத வரைதான்!

அழுகின்ற வரையில் நீ
புதைக்கின்ற சாட்சி நீதி
தருமென்ற நியதி நீ
மறுக்கின்ற நிலையில்......

விழுகின்ற வினைகள் வீழ்ந்திடட்டும்!
சிதைக்கின்ற மனங்கள் சாய்ந்திடட்டும்!
"வரும்" என்ற நியதி நிலைத்திடட்டும்!
மறைக்கின்ற மனங்கள் திரை விலகிடட்டும்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக