வியாழன், 4 ஜூன், 2009

"பொதுச்சொத்து!"


உலகத்தின் பொதுச்சொத்து!
உனக்குள் அடைக்க நினைக்காதே!
கலகத்தில் விடியல்சக்தி!அதைக்
கனக்கும் தடைக்குள் அடைக்காதே!

உலகத்தைப் பார்க்கும் விழிகள்!
கனக்கும் இதயத்தைக் கவியாக்கும் மொழிகள்!
சலனத்தைப் போர்வையாக்கும் மனங்களின்
கனக்கும் இதயத்தில் உதயத்தைக்காட்டும் கதிர்கள்!

உலகத்தைச் சுதிசேர்க்கும் இராகங்கள்!
உனக்குள் பூட்டிட நினைக்காதே!மௌனக்
கலசத்துள் சதிராடிடும் மனங்களின்
மனக்குளத்தினை உடைக்கும் புலர் இராகங்கள்!

உனக்குள் அடைத்திட நினைக்காதே! நீ
உனக்குள் அடைத்திட நினைத்தாலும்
தனக்குள் உடைத்திட வெளிக்கொணரும் கதிர்கள்!
உனக்குள் அடைத்திட நீ நினைக்காதே!

நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக