வியாழன், 4 ஜூன், 2009

"வான் மலர் வாடாது!"

வசந்த வானம்!இது
வாடிப்போகாது!
இசைந்த கானம்!
தென்றல் ஓடிப்போகாது!
வசந்த கோலம்!இது
அழிந்துபோகாது!உயிரில்
இசைந்த காலம்!
என்றும் மறைந்துபோகாது!

கசந்த மனங்கள் கூட
வசந்தம் காணும்!கவிதை
இசைந்த தினங்கள் கூட
சுகந்தம் பாடும்!
இசைந்து மனங்கள் தேட
இணைந்து பாடும்!
வசந்த தினங்கள் நாட
வளைந்து நாணும்!

இசைந்த வானம் இது!
எழில் வரைந்த கோலம் இது!
வசந்த வரவுகளை
பொழில் நிறைந்து வழங்கும் இது!
இசைந்த ஞானம் இது!
இதயம் நிறைந்த ஞாலம் இது!புது
வசந்த இரவுபகல்
உதயம் வரைந்து விளங்கும் மது!

இசைந்த அலைகள்!
இதயம் நிறைந்த வான் அலைகள்!புது
வசந்த அழைப்புகளை
இதயம் வரைந்து வான் அழைக்கும் அலை!
அசைந்த அலைகள்!
உதயம் நிறைந்த வான் அலைகள்!
இசைந்த பூம்புனலாய் வான்
இதயம் நிறைந்து தென்றல் வருடும் அலைகள்!

ஓயாது! அதுசாயாது!
காயாது! அலை ஓயாது!கவி
ஓயாது! மது குறையாது!இதயம்
காயாது! புது மைகள் குறையாது!
சாயாது! மனம் சலிக்காது!இது
ஓயாது! ஒலி சுதி குறையாது!
மாயாது! தினம் வான்மலர் வாடாது!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக