வியாழன், 4 ஜூன், 2009

"இணைந்து நீ வாராய்!"


தென்னை இளங்கீற்றே! எனைத்தேடிவந்து
முன்னை மனதோடு உடலோடு வருடியபோது நான்
என்னை மறந்திருந்து சுகித்திருந்த காலம்
என்னை இளங்கீற்றோடு இணைத்திருந்த கோலம்

முன்னம் ஒளவைசொன்ன பாட்டு அது
இன்னும் என்மனதின் தாலாட்டு!"நன்றி"
என்னும் மூன்றெழுத்தின் "தண்மை" என்றும்
இன்னும் தோன்றிடும் தேன்பாலூட்டும்!

தன்னுள் தாழ் சேர்த்தெடுத்த நீரை தலை
தன்னுள் தான்பதமாய்த் தந்து உலகம்
இன்னும் வியந்திருக்கும் "இளநீர்" இறை
இன்னும் இயற்கையதாய் நிலை சொல்லும்!

தென்னை இளங்கீற்றே! தென்றல் தாயே!
உன்னைப் பாடவார்த்தைகள் செந்தமிழில்
என்னைத் தென்றலதாய் வருடிவருகிறதே தாயே!
உன்னைப் படைத்தவனின் பெருந்தன்மை தன்னை

இன்னமும் நான் வியக்கின்றேன் தாயே!
இன்னமுதே! தென்னைமுத்தே! என்றும்
மன்னுலகம் போற்றிடவே வாழ்வாய்!என்றும்
என்னுலகில் என்னோடு இணைந்து நீ வாராய்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக