வியாழன், 4 ஜூன், 2009

"புத்தம் புதியதடி!"


சித்தமது புதிது! சத்தமின்றி மலரும்
முத்தமது புதிது! புத்தம் புதுநிலவாய்
நித்தமது புதிது! சித்தமதைக் கவரும்
சுத்தமது புதிது! முத்துக் கவிதையிது புதிது!

எத்தனை நாளடி ஏங்கிநின்றாய்! இதயம்
எத்தனைதரமடி தாங்கிநின்றாய்! உதயம்
எத்தனைதூரம் என்றபோதும் உன் இதயம்
எத்தனை நாளடி தூங்கியதோ!

இத்தரைமீதினில் இத்தனை நாள் நீ
புத்தரைப்போல்தான் தவமிருந்தாய்! தேன்
பத்தரைமாற்றாய் நீயிருக்க வீண்
பித்தரைப் போற்றிப்பாடி வைத்தேன்!

அத்தனை காலமும் மறைந்ததடி!
பித்தனாய் அலைந்தேன்! உறைத்ததடி!
முத்தனாய் நிறைத்தாய் இனித்ததடி!இதயம்
புத்தனைப் போலமைதி கொண்டதடி!

சித்தந்தானது குளிர்ந்ததடி!இதழ்கள்
முத்தத்தாலது நனைந்ததடி! முகைகள்
முத்துக்களாய் கவிதை உதிர்த்ததடி!மனந்தான்
வித்துக்களாய் புதிதாய்ப் பதித்ததடி!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக