புதன், 3 ஜூன், 2009

இனியாவது......

எத்தனைமுறை சொன்னேன்!
எப்படியெல்லாம் சொன்னேன்!
பித்தரைப்போல் நீயும் பிதற்றுகிறாய்!
செப்படிவித்தையெல்லாம் செய்கிறாய்!

சத்தமில்லாமல் சப்தங்கள்மூலம்
முப்படிமானமும் காட்டுகின்றாய்!
சுத்தமில்லாமல் சுருட்டும் விந்தைகளை
எப்படியுன் புத்தி கற்றுக்கொண்டதுவோ!

புத்தனைப்போல் அமைதிகாட்டி
எப்படிப் புத்தியைத்தீட்டுகிறாய்!
எத்தனை புத்தியைத்தீட்டியென்ன!சுயம்
எப்படியும் ஓர்நாள் தெரிந்துவிடும்!

"முத்தமிழ்" இதயம் சுத்தமில்லாதவர் மத்தியில்
எப்படி உதயம் பெற்றுவிடும்! இதனைச்
சத்தமாய்ச் சொல்வேன்!தெரிந்துகொள்! நீதான்
எப்படி உணர்வாயோ உணர்ந்துகொள்!

எத்தனைநாள்தான் உன்திருட்டு!இதற்கு
எப்படியும் காலம்தான் பதில்கணக்கு!சற்றும்
சித்தம் திருந்திட முயற்சிசெய்!இல்லை
எப்படியும் வருந்திடத் தொடர்ந்துகொள்!

எத்தனைசதிவலை பின்னிடினும் மதி
எப்படிஎப்படி சுற்றிடினும் விதியது
அத்தனைமுறை உன்னைச்சுற்றிவந்துன்
செப்படிவித்தைக்குப் பதில்கொடுக்கும்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக