செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இதயம் எழுதும் மடல் (6)


"ஆசைக்கனவுகள்!"
--------------------------

இனிய மலருக்கு தென்றலின் இனிய வருடலுடன்!

இயற்கை மடியில்
இறைவனின் வடிப்பில் எத்தனை
இனிமைகள்!

இயற்கை ஒன்றிய
உயரிய உணர்வுகள் புணர்கின்ற
இனிமைகள்!

இனிய தென்றலாய்
இதமாய் மனங்களில் எத்தனை
இனிமைகள்!

வானத்துச் சூரியன்
மோனத்திலிருக்கையில்,
கானத்து மேகங்கள்

மௌனித்திருக்கையில்,
கார்கால மயில்களின் சேர்காலக் கனவுகள்
கானத்துக் குயில்களின்

மோனத்தவங்களின் ஊர்கோல
நினைவுகள்,
வானத்துச் சூரியன்

வாசல் வருகையில்,
மௌனத்தவங்களின் மலரும் சுக
நினைவுகள்!

சுகங்களின் சுகங்கள்
சுகங்களின் சுகந்தங்கள்- அவை
இனங்களின்,

உயிர் இனங்களின்
சுகராக ஸ்பரிசங்கள்!
என்றும் மனங்களின் மத்தியில்,

மலர்கின்ற இதயத்தில்,
வளர்ந்திடும் எண்ணங்கள்,
முகங்களின் மலர்வுகள்,

மகிழ்கின்ற உதயத்தில்,
வளர்ந்திடும்
காதல் வண்ணங்கள்!

கனிந்துவர,
காதல் கனிந்துவர,
கார்கால சுகங்கள்,

ஊர்கோலக்கனவுகளாய்
கலந்துவர,
காதல் கவிதைகள்,

சேர்கோல சுகங்கள்,
கார்கால மயில்களாய்
இசைந்து இன்பம் கூட்டிவிட,

துன்பங்கள் தொலைந்து,
சங்கீத ஸ்வரங்களாய்
அசைந்துவரும் ஆசைக்கனவுகள்,

ஓசையின்றி இசைவாக இசைகிறதே!
இசைகினற இனிமைக் கனவுகள்
வரவுவைக்க வரும் இளந் தென்றல்
இதமாக வருடிவிட

மீண்டும் மறுமடலில் சந்திக்கும் வரை...

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்.
28-06-2005.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக