புதன், 3 ஜூன், 2009

"வாழிய!வாழிய! வாழியவே!"


கார்த்திகை மலரே! காவிய மலரே!
கார்த்திகை திங்கள் ஓவிய மலரே!
நேர்த்திகை நீ சேர்த்திடும் மலரே!
பார்த்திகை புகழ் நீ சேர்த்திடும் மலரே!

நேர்த்தியாய் உனை வார்த்திட்ட அழகு!
கீர்த்தியாய் உனைச் சேர்த்திட்ட அழகு!
கார்த்திகையாய் உனைக் காத்திட்ட அழகு!
கார்த்திகையே! உனைப் பார்த்திட்ட அழகு!

கார்த்திகைக்கே அணிசேர்த்திட்டாய் மலரே!
பார்த்திகைக்கும்படி செய்திட்டாய் மலரே!
கார்த்திகைக்கும் பேர் சிறப்புண்டு மலரே!
கார்த்திகைத்திங்களும் சிறப்புற்றாள் மலரே!

சேர்த்திருக்கும் செங்காந்தள் மலரே!
சேர்த்துவைக்கும் செங்கோட்டை மலரே!உனைச்
சேர்த்திருக்கும் கை ஓங்கிடும் தினமே!உனைச்
சேர்த்திருக்கும் புவி பாங்குடன் மலரே!

பார்த்திருக்கப் பார் வியந்திருக்க நீ
சேர்த்திருக்கப் புகழ் சேர்ந்திருக்க
கார்த்திகையே காலம் கனிந்ததடி!மலர்க்
கார்த்திகையே ஞாலம் சிறந்ததடி!

கார்த்திகை தீபங்கள் சூழ்ந்துவர
கார்த்திகைப் பெண்கள் சேர்ந்துவர
கார்த்திகேயன் அவன் அவதரித்த
கார்த்திகைத்திங்களில் நீ மலர்ந்தாய்!

கார்த்திகேயன் அவன் பாடம் சொன்னான்!
கார்த்திகையில் அவன் வியூகம் வைத்தான்!
கார்த்திகையில் காரிருள் அகற்றி மலர்க்
கார்த்திகையே உனைப்போற்றி நின்றான்!

பார்த்திருந்தேன்! உனைப்பார்த்திருந்தேன்!
வார்த்திருந்தேன்! கவி வார்த்திருந்தேன்!புவி
பார்த்திருக்க உனைப்பாட்டில் வைக்க உனைச்
சேர்த்திருந்தான் தனைப் பாராட்டிடுவேன்!

வேர்த்திருக்கும் உடல் சேர்த்திருக்கும் மனம்
சேர்த்திருக்கும் கடல் களம் அமைக்கும்!கடல்
சேர்த்திருக்கும் செங் கதிரொளியோன்! புவி
பார்த்திருக்கும் சங்கத் தமிழ்க்கொடியோன்!

"கார்த்திகேயன் அவன் வாழ்கவென்று!மலர்க்
கார்த்திகையே வெற்றிசூடும்" என்று பறை
சாற்றிடவே புகழ் சேர்த்திடவே!தமிழ்
போற்றிடவே புவி வாழ்த்துகவே!

கார்த்திகையே உனைப்பாட்டில் வைத்து
கார்த்திகை மலர் உனை ஏட்டில் வைத்து
கார்த்திகை மைந்தனைப் பாடுதற்கும்
கார்த்திகை மலர் நீ சந்தம் தந்தாயே!

நாற்றிசையும் புகழ் ஓங்குகவே!
நற்றமிழ் உன் புகழ் பாடுகவே!
ஏற்றிவைத்து ஈழம் போற்றிவைத்து பறை
சாற்றிநிற்கும் மலர் நீயல்லவோ!

வாழ்க நின்புகழ்! வளர்க நின்புகழ்!
வாழிய வாழிய வாழியவே!
சூழ்க தண்புனல்! வாழ்க செந்தமிழ்!
ஈழம் வாழிய! வாழிய! வாழியவே!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக