திங்கள், 8 ஜூன், 2009

"மனச்சாட்சிகள் உண்மைபேசும்!"

கண்ணுக்குள் கவிதைபாடி
களித்திருந்தகாலங்கள்!
மண்ணுக்குள் கவிதையுன்னால்
புளித்துப்போன கோலங்கள்!
விண்ணுக்குள் நிலவு போல
விதந்துரைத்த காலங்கள்!மனப்
புண்ணுக்குள் உலவுகின்ற
கசந்துவிட்ட காயங்கள்!

"பெண்ணுக்குள்பெருமை" என்று
பேரின்பவெள்ளமென
கண்ணுக்குள் கண்ணாக
அன்று எனைக் கொடுத்தேன்!
மண்ணுக்குள் உடல் மறைந்தாலும்
மறையாதே என்று
கண்ணுக்குள் "ஆத்மாவின்
ராகங்கள் நீ" என்றேன்!

எண்ணுக்குள் எழுத்தாய் என்
எண்ணத்தில் மலர்ந்த
வண்ணத்துள் நிறைந்த கவிதை
வண்ணத்தை உந்தன் கை
வண்ணத்துள் திணித்தேன்! எந்தன் மன
வண்ணத்தைச் சிதைத்து
கண்ணுக்குள் கண்ணான என் கவிமலர்களை என்
கண்ணுக்குள் நிறைந்த கவிமலர்களை என்

கண்ணுக்குத் தெரியாமல் உன் பெயர்
வண்ணத்தில் பதித்தாய்!
விண்ணுக்குத் தெரியும்
என் கவிதை அதுவென்று! இதய மலர்
வண்ணத்துவாசகர் இதய மன்றத்துள் தெரியும் அது
என் கவிமலர்களென்று!
எண்ணத்து நீச(கி)கர் நீ சதிசெய்தது ஏனென்று
என்தனுக்கு நன்கு புரியும்!

கண்ணுக்குள் மலர்ந்த
காதலைக் கொச்சைப்படுத்தி இதயப்
புண்ணுக்குள் வேல் பாய்ச்சி
போதை உன் இச்சையைத்தீர்க்கலாம்!
விண்ணுக்குள் அமாவாசை உன்
இதயத்துள் தினம் அமாவாசை! உன்
கண்ணுக்குள் நிறைந்த காமம்
காதல் கருத்தினை அழித்த மோசம்!

மண்ணுக்குத் தெரியவரும்! உன்
மானமும் கப்பல் ஏறும்!
விண்ணுக்குத் தெரியும் நேரம் உன்
வேசமும் கலைந்துபோகும்!
பெண்ணுக்குப் பெருமைபேசும் உன்
நாடகம் தெரியும் நேரம்
மண்ணுக்குப் புரியும்!
மனச்சாட்சிகள் உண்மை பேசும்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.blogger.com/post-create.g?blogID=5275467254641743329

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக