திங்கள், 8 ஜூன், 2009

"தேன்தமிழ்த் தென்றலின் இனிய தேடல்!"

தேடலின் தேடல்,
தேவையைப் பொறுத்து
நாடலில் தீரும்!

வாடலில் தேடல் இதய
வாடலில் தேடல்,
ஓடிட ஓடிட,

நாடலில் நாடும்
தேவைகள் கூடும்!
கூடிடக் கூடிட,

தேடலில் ஓடும்!
வாடலைக் கூட்டும்!
காடதைத் தேடிட

ஓடிட வழி வகுக்கும்!
ஓடிட ஓடிட
ஓடிடும் மனங்கள்,

நாடிட நாடிட,
நம்மைத்துரத்திட
நட்டாற்றில் தவிக்க வைத்திட,

வாடிட, மனங்கள் துடிப்பதை.
நம் கண்முன்னால் காண்பதை,
மறுத்திடமுடியுமா!

நாடிட, நல்வழி நாடிட,
நமைதுரத்தும்
துன்பங்கள் தொலைந்திட,

நாடிடு! மனமே நாடிடு!
நல்வழி தன்னை நாடிடு!
தினம் தினம்

தேடிடும், நல்வழிப் பாதையை
நன்றாய்த் தேர்ந்தெடு!
தேர்ந்தபின்,

நாடிய பாதையில்
தடம் புரளாது,
மனந்தனை ஒன்றாய் நிறுத்தி,

வாடிடும் வாட்டத்தைப் போக்கிடு!
வாட்டத்தைப் போக்கி,
வருங்காலத்தை நீ வரவிடு!

தேடலின் தேடல் வேண்டும்!
தெளிந்த நல்
நீரோடைபோலே,

நாடலில் நாடல், நம்
இதயங்கள் தேடும் தேடல்!
நல் நூல்களைத் தேடிச்சென்று,

நாடலில் இன்பங்கூடும்!
நம் இதயங்கள் அமைதிகாணும்!
இயற்கைச் சுகங்களில்

தேடல்! பிறர் மனங்களைச்
சிதைக்காத்தேடல்! தென்றல்
சுகங்களை வரவுவைக்கும்!

பாடலில் தேடல்!
நற்பாடலில் தென்றல் கூடல்!
இதய வாடலைப் போக்கும் தேடல்!

கூடலில் கூடல்! நல் இதயங்கள்
ஒன்று கூடல்! கூடிய மனங்களோடு
சுகங்களின் இனிய தேடல்!

தேடலில் தேடல்! நல் கவிதையின்
பொருளைத்தேடல்! நாடிடும் மனங்களோடு
நற்பண்புடன் இனிய தேடல்!

ஊடலில் உணர்வுகண்டு, உள்ளங்கள் நன்று
தேடல்! தேடலில் இனிமைத் தேடல்!
நல்லிதயங்கள் இனிமைத்தேடல்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3103&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக