திங்கள், 8 ஜூன், 2009

" பாசப்பிடிப்பு"


கிட்ட இருந்தால் முட்டப்பகை!
எட்ட இருந்தால் கிட்டும் சுனை!
நட்ட நடு வீதியில்
நாம் தனியே போகையில்
கிட்ட வரும் விபத்தை
தட்டி விடும் கைகள்
எட்ட வரும் உறவா!
உதரம் கட்டி வரும் உறவா!


'கிட்ட இருந்து கொண்டு
முட்டிமோதும் நிலையைவிட
எட்ட இருந்து கொண்டு சமயம்
கிட்டு கின்ற போதெல்லாம்
ஒட்டி உறவாடுவதில்
ஓர் நிறைந்த சுகம் உண்டு' என்று
எட்ட வந்த புலம்பெயர்
வாழ்வது கூறுகிறதே!


"பட்டம் பதவிகள் பெற்ற பின்பு
சுற்றம் என்ன! சூழம் என்ன!"
என்று படித்த பல பண்பரசர் பறை
கொட்டி முழக்கு கையில்
நீட்டி யளக்கையில்
எட்ட இருந்து கொண்டு
பாசம் கொட்டி விடத்
துடிக்கின்ற உண்மைத் துடிப்பு அது

கட்டி யணைத்து உணர்வால்
துடிக்கின்ற துடிப்பு அது
மட்ட மான உறவு அல்ல!
மேல் மட்டமான பாசப் பிடிப்பு அது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக