திங்கள், 8 ஜூன், 2009

"அவனை மறந்துவிடு!"


தடுமாறும் மனங்கள்
தலைகீழாய்ப் போகும் நிலை!
'வடு ஆறும்' என்று மேலும்
வடுக்கூட்டும் தலைகீழ்நிலை!
கொடு அன்பை! எடு அன்பை!
விடு வம்பை! மனம்
கடுகடுத்து ஆவதொன்றும் இல்லை!
உன் காயங்கள்

ஆறும் நிலை! மாறும் நிலை!
உன்மனப்பதிவின்
மாறும் நிலை! உன் தடு
மாறும் நிலை! விதிப்பழி
கூறும் நிலை! உன் மனத்தராசில்
உனைச் சரிபார்! அது
கூறும் நிலை! உன் மதித்தவறாயின் மதிப்படி
உன்நிலை பார்!

பார்த்திருக்கும் விழிகளுக்குப்
பதில் சொல்! உனைச்
சேர்த்திருந்த வழிமன்னவனின் நிலை பார்!
'உனைத்தவிக்கவிட்ட
காத்திருந்து கண்ணீர் வடிக்கவிட்ட கயவனா
அவன்!' என்று உன் இதயம்
சேர்த்திருந்து கண்ணீர் வடிப்பதாயின்
அவனை மறந்துவிடு!

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக