திங்கள், 8 ஜூன், 2009

"வாழிநீ! பாரதி! வாழிநீ!"


'பாட்டுக்கொரு புலவன் நீ!"
வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏட்டுக்கும் ஒளிகூட்டும்
பாட்டுக்கொரு புலவன் நீ!

நாட்டுக்கொரு புலவன் உனைப்போல்
நாட்டுக்கொரு பாட்டுப்புலவன் வழி
காட்டப்பிறந்தால் நாடுபிழைக்கும்
காட்டுக்கூச்சல் போட்டு

பாட்டைக்கெடுக்கும் கூட்டத்துள்
"ஏட்டுப்படிப்புமட்டும்
கோட்டைக்குள் நுழையும்" என்ற
கூட்டுக்கூச்சல் ஓருபுறம்! இதயக்

கூட்டுக்கூச்சல் மறுபுறம்
"நாட்டுப்பிடிப்பு" என்று
நாட்டைக்கெடுக்கும் கூட்டம் ஒருபுறம்
காட்டு மிராண்டித்தனத்தைக் காட்டி

கூட்டுமிருகங்களைக்கூட்டி
பாட்டுப்பாடும் கூட்டம் ஒருபுறம்!
பாராட்டுப்பெறும் கூட்டம் மறுபுறம்!இதற்கொரு
வேட்டுவைத்து தகர்த்து விடியல்தனைக்

காட்ட உனைப்போல் ஓரு
பாட்டுப்பாடும் புலவன்
நாட்டுக்கு வேண்டும் பாரினில் பாரதி!
பாட்டுக்கொரு புலவனாய்

நீ பிறந்த நாள் இன்று! - இதய
வாட்டங்கள் போக்கிட
நீ உதித்த நன்னாள் இன்று!
வீட்டுக்கொரு விளக்கேற்றி விடியல்தனைக்

காட்டிய நாள் இன்று!
கூட்டங்கள் நீக்கி இதயக்
கூட்டினைத்திறந்து சுதந்திரக்காற்றைச்
சுவாசிக்க நீ வந்த நாள் இன்று!

ஆட்டுமந்தைக்கூட்டத்துள் அடங்கிப்போகாமல்
அடிமைவிலங்குக்குள் அடங்கிப்போகாமல்
மோட்டுமந்தைக்குள் முத்தெடுக்க நுழைக்காமல்
பாட்டுப்பாடும் குயிலாய் சுதந்திரமாய்

பாட்டுப்பாடிய பாரதியே! நீ
காட்டிய பாதைகள்! நீ மீட்டிய வீணைகள்
வாட்டிடும் மனங்கட்கு கதிரொளியே! கிழக்குக்
காட்டிடும் பாதைகள் உன்வழியே! வாழி நீ! வாழிநீ!

நன்றி
சுபம்

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக