திங்கள், 8 ஜூன், 2009

"மலரோடு மௌனம்"

நிலவோடு நீங்காத
நினைவோடு நானிருக்க
நிலவோடு தூங்காத
மனதோடு நீயிருக்க
கலவோடு தாங்காத
கனவோடு தானிருக்க-தென்றல்
குலவோடு ஏங்காத
மலரோடு மௌனம் ஏனோ?...

சிலரோடு சிலராக
சில்லறையாய் சில்மிசங்கள்
பலரோடு பலராகி
கல்லறையாய் கல்மனங்கள்
மலரோடு மலராகி
மெல்லனவே நல்மனங்கள்-முன்றலில்
உலரோடு உலராகி
சொல்லெனவே மௌனம் கொல்வதேனோ?..

பலவோடு பலவாகி
பலாப்பாலாகி பலமனங்கள்
நிலவோடு நிலவாகி
நிலாப்பிள்ளையாய் நிலமனங்கள்
கலவோடு போலாகி
கலாரசனைகளை கலைத்துவிட-மன்றம்
நிலவோடு நூலாகி நிலைமறந்துவிடும்
மலரோடு மௌனம் ஏனோ?;...

நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3108&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக