திங்கள், 8 ஜூன், 2009

"விடைதேடும் படலம்"


விடை சொல்ல வழி தெரியவில்லை!
மடைதிறந்த மொழி வெள்ளமென,
படை கொண்ட மொழி அள்ளிவரும்,
தடையின்றி உளி சொல்லும் சிற்பம் போல்,

"விடை சொல்வாயா! ஆதி
விடைசொல்வாயா" என்ற,
நடைசோல்லும் கணைகள் மோதி,
நடை போடும் தமிழ், என்னை
விடைசொல்லச் சொல்கிறதா!
தடை தாண்டச் சொல்கிறதா!

கடைநிலை கொண்ட மாந்தர்
நடைகளை நாம் பார்க்கும் போது,
விடையொன்று தெரிகிறது!
எடைநிலை கொண்ட மனத்தோடு, வாழ்வில்
விடைதேடும் பார்வைக்குள் தடம் பதிக்கும்போது,
உடைகளைகிறது! உயிர் அது பிரிகையில்,

நடைமுறை வாழ்வதன் நிலை அது தெரிகிறது!
தடைகளை உடைத்தெறிய, தழுவிடும் தர்மநீதி,
நடை தன்னையே உயிருடன் மறுபிறவிக்குள் இணைக்கிறது!
விடையிதில் ஒன்று! நம் நடைபாதை வாழ்வியல்
கடைநிலை என்றானால்,விடையிதில் ஒன்று! நம்
நடைபாதைதனில்,நாம்சந்திக்கும் தடைகளெல்லாம்,

உடைகின்ற நிலைவேண்டி படாதபாடு
நாம் படவேண்டி, தடம்புரண்டு செய்தவறுகள்,
சடைகின்ற தலைகீழ் நிலைகள்தான் தண்டிக்கும் நிலைக்குள்,
நம்மைக் கொண்டுசென்று விடுகிறது!
"உடைகின்ற நீர்க்குமிழி வாழ்வு" என்று கண்டவர்கள், "எந்நேரமும்
நாம் உடையலாம்" என்றுகண்டு,

நடைபோடும் வாழ்வியலில், மற்றவர்க்கு
துன்பமதை, கொடுக்காத
நிலையோடு பார்த்துக்கொண்டால் போதுமே!
விடைதேடும் மனவிழிகள் கடைத்தேறும்!
தடைகள் தாம் தானாக உடைந்து,
இன்பம் வாழ்வியலில் நடைபோடும்!

குடைகின்ற கேள்வியதன்
பதில்தானும் கிடைத்துவிடும்!
தடுமாறும் நிலைதானாய்
நமை விட்டு மறைந்துவிடும்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக