புதன், 3 ஜூன், 2009

"இரசிகையுன் இரசிகனிவன்!"

தொலைதூரப்பயணத்தில்
தொலைந்தவளுக்கு!
தொலைந்தவன் தொலைத்தவன்
புலம்பல் இது!

கலைந்துவிட்ட கனவுகள்
தொடர்கின்ற பயணமிது!உன்
மலைத்துவிட்ட கவிதைகளில்
நினைவுகளின் துடிப்பு இது!

நினைவுகளை நீங்காதுன்
தொடுத்துவிட்ட கவிதைக்குள்
கனவுகள் தூங்காதுன்
விழித்திருக்கும் விழிகள் இது!

கனவுகளை வளர்த்தவன்
கவிதையாகிப்போனவன்
நினைவுகளை மட்டும் நீ
வரவுதனில் வைத்துவிடு!

நினைவுகளின் சுகங்களில்
மிதந்து கவலைவிடு!உனை
நினைத்து உன்சுகம் அதுவென
மிதந்து எனை நிறைத்துவிடு!

கனவுகளை வரவு வைத்து
தினம் கவிதை படிக்கின்றேன்!
மனதினிலே தெளிவுபெறு!
கனம் கவலை ஏதுமில்லை!

எனைமறந்து
நான்பாடும் பாடல்
நினைவுளில் என்
தேன்மொழிபாடும் தென்றல்!

எனைமறந்து
நான் நெடுநாளாச்சு!
உனைநிறைத்து
தேன்கூடு போலாச்சு!

"எனைமறந்து விடு!"
என்றுசொல்லும் மொழியல்ல!
"உனைமறந்து விடு!"
என்றுசொல்லும் விழியல்ல! உன்

தினைப்புலத்தில் தேன்சேர்த்து
கவிதைகொடு! உன்
நினைப்புலத்தில் தேன்நினைவுகளை
விதைத்துவிடு!உன்

மனப்புலத்துக் கவிதைகளை
இரசிப்பதற்கு காத்திருக்கும்
வனப்புலத்துக் காதலன்!
இரசிகையுன் இரசிகனிவன்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக