புதன், 3 ஜூன், 2009

"ஆடைதட்டிப்பாரடி கண்ணே!"


"ஊருக்கடி கண்ணே! உனக்கல்ல!" என்று
பாருக்குள் பலர் படும்பாடு! கவிமன
ஊருக்குள் நீரோடை போலும் கணம்
பாருக்குள் ஊறிவரும் கவிமனந்தான்!

மேடைக்கு மேடைமுழக்கங்கள்! மனம்
வாடைக்கு மாறும் இழக்கங்கள்! தினம்
ஆடைக்குள் போர்வைக்குள் புழுக்கங்கள்!
கோடைக்குள் குளிர்தேடும் பழக்கங்கள்! என்றும்

சாடைக்கு மாடைக்கு வாழ்பவர்! மனக்
கூடைக்குள் கோடிக்கணக்குக்கள்! வினா
பாடைக்குப் போகின்ற வரையிலும் கவிமனக்
கூடைக்குள் கொட்டிக்கிடக்குமே!

ஆடைதட்டிப் பார்த்தால் கவிக்
கூடைதனைத் திறந்து பார்த்தால் விடை
மேடைதனில் நின்று முழங்கும்! வெறும்
மேடைக்குழப்பங்கள் விளங்கும்!

ஊரைத்திருத்திடும் மனங்கள் தம்
உள்ளந்திருந்திட நினைத்தால் நல்ல
பேரைத்துலங்கிடப் பெறலாம்!புகழ்
வெள்ளம் நிறைந்திடப் பெறலாம்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக