புதன், 3 ஜூன், 2009

"இதுவரை நீ!எதுவரையோ!"



மதுவினில் மூழ்கிய அந்தநாள்!
மதுமலர் மகிழ்வினில் மகிழ்ந்தநாள்!
எதுவித கவலையும் இன்றிநாம்
புதுமலர்க் கவிதைகள் புனைந்தநாள்!

"எதுவரை நிலவுநீ சுகம்தருவாய்"! என்று
மதுவினில் மயங்கிமடிசார்ந்துகொண்டு
புதுமைகள் பொங்கிட வினவிநிற்க
பதுமை நீ பாங்குடன் இதழ்விரித்தாய்!

"புதுமைகள் எதுவரை தொடர்ந்திடுமோ
அதுவரை கவிதைகள் புனைந்திடுங்கள்!
பதுமையாய் மயங்கிநான் இரசித்திடுவேன்!
அதுவரை தொடர்ந்திடும் நம்சுகமே!" என்றாய்!

புதுமை உன்விழிகள் மொழிகள் பேச
மதுமை என்கவிக்கு வர்ணம் தீட்ட
புதுமை கள்கவிக்கு மகுடம் சூட்ட
"புதுமை" என்று உன் தேன்இதழ்கள் சேர்க்க

"புதுமையிது! புலர்ச்சியிது! புவியில்
புதுமலர்ச்சி இது! என் தேன்மொழி
மதுத்தென்றல் வருடல் இதுவன்றோ!" என்று
பதுமைமதி மகிழ்ந்திடவே பதிந்தமதி இது!

எதுவரை போகுமோ போகட்டும்!
புதுவித அநுபவங்கள் சேரட்டும்!
மதுமதி தமிழ்க்கடலுக்குள் மூழ்கட்டும்! தேன்
மதுவுண்ணும் வண்டுகள் மகிழட்டும்!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக