'வருடம் ஒன்று
கடுகதியில்!இதயம்
மருவும் நன்று
நினைவலைகள்! இனி
மருவும் வருடம்
மகிழ்வில் இனிக்க
வருடம் நன்று
நடைபோடும்!"என்று
வருடும் இதயம்
திருவாய் மலர
திருவும் பெருகும்!
கலையும் நிறைவாள்!
மருவும் மலைபோல்
மலைமகளும் உறைவாள்!
வருடும் உதயன்
நிறைவொளியும் நிறைப்பான்!
கருமம் கூட்டும்
காருண்யம் நிறைக்கும்!
தருமம் காக்கும்!
பேருண்மை சிறக்கும்!மனித
மிருகம் தொலைந்து உலகில்
மனிதம் பிறக்கும்!
அருகும் அன்பும் பெருகும்
நிலை பிறக்கும்!
மருவும் நல்மனங்கள்
பெருகும் தினங்கள்
வருடும்! மயிலிறகாய்
வருடும்! நிலவில்
மருவும் மகிழ்வில்
மனங்கள் படைக்கும்!
வருவாய் மலரே!
புதுவரவாய் மணம்தரவே!
வாழ்க புதுமலரே!
வருவாய் நல்வரவே!
வாழ்க மலர்நிலா மனங்கள்!
வளங்கள் பலபெறவே!
நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
காதல் முத்து (3)
14 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக