ஊமைக்குள் இருக்கும் உணர்வு மன
ஆமைக்குள் சுருக்கும் நினைவு! "உன்
ஊனக்கண் திறந்துபார்!"என்று என்
ஞானக்கண் உரைக்கும் உனக்கு!
ஊமைக்காயங்கள் நூறு!பாவையுன்
ஊமைக்குமுறல்கள் கீறும்!அது
"ஊனக்கிறுக்கல்கள்" என்று இந்த
ஞானக்கிறுக்கனுக்கு கூறும்!
ஆமைக்குள் ஆயிரம் கதைகள்! பொறு
ஆமைக்கும் உனக்குள்ளும் வதைகள்!மனம்
கூனிக்குறுகுகின்ற நிலைகள்! தினம்
கூனியுன் மனச்சூழ்ச்சிகளின் அலைகள்!
"ஊமையாய் இருப்பதிலும் சுகமா! என்று
ஊமையென் மனமறிந்த ஓர் இதயம்
கானமழை பொழிவதுபோல் கவிபொழியும்!
ஞானமழை எனக்குள்ளே! துளிர்த்தெழு(து)ம்!
ஊமையென் கதைகள் ஓர்நாள் இந்த
ஊமையுலகில் அரங்கேறும்! பல
ஈனப்பிறவிகளின் நிலைகள் கவி
ஞானக்கிறுக்கல்கள் வெளிக்கொணரும்!
ஊமைநீ ஓர்நாள் உணர்வாய்! என்
ஊமைமனம் கண்டு அதிசயிப்பாய்! என்
ஞானத்தவப்பலன் காண கால
ஞானத்தேவனவன் வரம்தருவான்!
நன்றி!
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=5631&hl=
காதல் முத்து (3)
14 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக