வெள்ளி, 5 ஜூன், 2009

"அன்றைய இன்று!"

சிந்தையைக்குளிரவைக்கும் தென்றலுடன்
சொந்தம் கொண்டாடிநின்றேன் அன்று!
சந்தம் இசைத்தவண்ணம் சங்கீதக்கடலில்
சிந்தையை மூழ்கடித்தாள் தென்றல்!

மந்தைக்கூட்டத்தில் மாதவன்கோபாலன்
சந்தம்இசைக்கும் புல்லாங்குழல்போல் என்
சிந்தைக்குள் இனிமைபெற சிருங்காரரசத்தோடு
சந்தம் இசைத்துநின்றாள் இசைத்தென்றல்!

சொந்தம் அவள்மடியாகி சிந்தைஅவளாகி
நந்தவன மலரவள் நறுமணத்தோடிசைந்துவர
சிந்துநதிக் கரையில் சிந்துகவி பாரதியாய்
சுந்தரமாய்க் கவிகொடுத்தேன் அன்று!

அந்தநாள் இந்த நாள்!தென்றல் எனைக் கலந்தநாள்!
இந்தநாள் அந்த சுகம் நினைத்தாலே இனிக்குதடி!
அந்தநாள் நினைவுகளை இன்று அசைபோட்டிடவே
இந்தநாள் மலர்ந்ததடி! இதயக்கவி பிறந்ததடி! நன்று!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4149&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக