வெள்ளி, 5 ஜூன், 2009

"உன்னுடன்"

கூட்டைத் திறந்து மனம் கவி
வேட்டைக்குப் போகிறது!
காட்டைக் கவிதையாக்கி
ஏட்டைப் புரட்டுகையில் மனக்

கூட்டைக் கலைத்துக் கொண்டு
பாட்டைப் பாடுகின்றாய்! நீ
பாட்டைப் பாடுகையில் உன்
பாட்டை நான் இரசிக்கையில் கலைக்

கூட்டுக்குள் அடைத்துவைத்து மன
வேட்டுக்கள் தீர்க்கின்றாய்! "என்
வீட்டுக்குள் உனை ஏன்விட்டேன்!" என்று
கேட்டுக்கொள் கேள்விக்கு "காதல்

மாட்டிக்கொள்!" என்கின்றாய்! நான்
காட்டிக்கொள்ளாமல் மௌனப்
போட்டிக்குத் தயாரானால் குறை
காட்டிக் கொல்கின்றாய்! எனை

ஆட்டிப் படைக்கின்றாய்! "எனை
வாட்டி வதைப்பது சரிதானா!' என்று
நீட்டி முளக்கிப் பிடிவாதம் செய்கின்றாய்!உனைப்
பாட்டில் கொடுத்திடவா! உன்காதலைச்

சூட்டிக்கொண்டாடிவா! மன
வீட்டில் பூட்டிக்கொண்டாடிவா! நான்
மாட்டிக்கொண்டேனடி! கண்ணே கலைமானே!
கூட்டிக்கொண்டாடடி பெண்ணே கவிமானே!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4131&hl=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக