வெள்ளி, 5 ஜூன், 2009

"உயிர்க்கலை!"

இன்றுபோல் இருக்கிறது! அன்று
இன்றுபோல் இருக்கிறது! இன்று
கன்றுபோல் மனது நின்று
வென்று துள்ளிக்குதிக்கிறது!வாழைக்
கன்றுபோல் தென்றலாய் இதயம்
இன்று துள்ளிக்குதிக்கிறது!உதயம்
அன்றுபோல் ஒளிச்சுடராய்
நின்று அள்ளிச்சிரிக்கிறது!

"என்று வரும் வசந்தம்
என்றுவரும்!' என்ற கேள்விக்கு
"என்றுமே மனம் இசைந்தால்
நன்றுவரும்!இதயம்
என்றுமே தினம் வசந்தம்
என்றும் கொண்டு வரும்!"
என்று இன்று என்மனம்
நன்று சொல்லிச்சிரிக்கிறது!

ஒன்று மட்டும் உண்மை!
ஒன்று மட்டும் உண்மை!
வென்று வரும் இளமை
நன்று இனிமை மனமென்றிருந்தால்
என்றும் வரும் சுகந்தம்!
நன்றும் தரும் மகரந்தம்!
என்றும் தேனூறி வாழ்க்கை
நன்று தந்துவிடும் புதுவசந்தம்!

இன்று ஓர்கனவில் கவிதைப்பெண்ணே!
நன்று நீ இணைந்தாய் இனியவளே!
கன்றிவிடும் கன்னம் கனிமுத்தங்கள்
நன்று நான் இணைத்தேன் கனியவளே!
"வென்றுவிடு!"என்றாய்! "என்னை
நன்று வெற்றிகொள் நீ!" என்றேன்!"நீங்கள்
ஒன்றிவிட்ட பின்பு உங்கள் இதய
மன்று வெற்றிதானே என்வெற்றி!" என்றாய்!

அன்றிலதாய் என்னுள் நீ
நின்றிருக்கும்போதில்
நன்றிலதாய் ஆகுமா!
நன்றில் என்றுமே ஆகுமே!
ஒன்றிலதாய் ஆகுமா! வெற்றி
என்றிலதாய் ஆகுமா!
அன்றிலதாய் ஆனவளே!
என்றும் சலனம் இதில் இல்லையே!

கொன்றுவிடும் கவலைகளை
வென்றுவிடும் உன்இதழ்க்கலை!
சென்றுவிடும் இடமெல்லாம் மனம்
நன்றுதரும் என் இதயக்கலை!
என்றும்வரும் தினம் கவிக்கலை! சினம்
வென்று மனங்களைச் சீர்திருத்தும்கலை!
என்றும்வரும் மனக்குயிற்கலை!
தென்றல்தழுவலடி! நீ என் உயிர்க்கலை!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக