வெள்ளி, 5 ஜூன், 2009

"இதயத்தில் நீ!"


இதயத்தின் இனிய குரல்! புதிய
உதயத்தைக் காட்டும் குரல்! இனிய
இதயத்தின் புனிதனிவன்! என்
உதயத்தின் ஒளிக்கீற்று இவன்!

இதயங்கள் மறக்காத இனிய
உதயகீதங்கள் இசைத்த குயில்!மனித
இதயங்கள் மட்டுமன்றி அசையும்
உதயஜீவன்கள் மயங்கும் குயில்!

இதயத்தை வருடும்! இமய
உயரத்தை தொட்டுமகிழும்! புதுமை
உதயத்தை உலகுக்களிக்கும்! அருமை
இதயத்தின் புனிதம் இவன்!

இதயங்கள் இருட்டாயிருக்கும் உலக
இதயங்கள் இவன் குரல்கேட்டால் புதிய
உதயங்கள் பொருட்டாய் மீட்டும்!இனிய
உதயங்கள் இவன்பாட்டில் மிளிரும்!

"காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளில் அவள் ஓவியம்!" கவி
காலங்கள் அழியாத பாடல் ஒலி
அலைகளில் அழியாத ஓவியம்! கவிக்

கோலங்கள் போட்ட கவியரசன்
"கலைத்தாயின் கவிக்கடல்"கண்ணதாஸன்
கலைக்காவியக் குரல்வண்ணன் பி.பி.ஸ்ரீநிவாஸை
"காலங்கள் அழியாத குரல்மேதை" என்று இசைக்

கோலங்கள் இமயத்தைப் புகழ்ந்தவிதம்
கலைக்கோலங்கள் இதயத்தை நிறைத்த இதம்
"மலைச்சிகரங்கள்" எம்.எஸ்.வி ராமமூர்த்தி புகழ்
காலங்கள் அழியாத இதய மதுரக்குரலோன்!

காலங்கள் அழியாத குரல்வண்ணன்! கவிக்
கோலங்கள் போடும் கவிக்கண்ணனிவன் பல
மலை மொழிகளின் பார்புகழ் நாயகன் பி.பி.ஸ்ரீநிவாஸன்
கலை மொழிகளின் ஓவியன்! என் இதயத்து இனிய நாயகனே!

காலங்கள் காலங்கள் நீ வாழ்க!
கலைக்கோலங்கள் புகழோடு நீ வாழ்க!
ஞாலங்கள் போற்றிடும் நீ வாழ்க!
காலைக்கதிரவன் ஒளியாக நீ வாழ்க!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக