சனி, 6 ஜூன், 2009

1-1-2006 "வருக! தருகவே!"

அருள் தரும் ஆதித்தன்!அவன்
இருள் தனை நீக்கியே அன்பு
பொருள் தனை உணர்த்திடும்
அருள் ஒளித்தீபம் ஏற்றியே

வரும் நிலை நோக்கியே வரம்
தரும் நிலை சேர்த்திட அறம்
தரும் சுகம் சாற்றியே அவன்
அரும் அருள் போற்றிட வரும்

பொருள் நிறை மகிழ்வுடன் வரும்
அருள் நிறை புதுவருடமே!உன்
பொருள் நிறை வருகையால் உலக
இருள் நிலை தானும் அருகவே!

"வரும் வாழ்வில் வசந்தமே!" எனும்
அரும் பொருள் இதயம் நிறையவே
வரும் புது வருடமே! நீ தரும் இனிமைசுகந்தமே!
அரும் மது தரும் இரசமென அகிலம் மகிழ்வினில் மலர்கவே!

அருள் நிறை அருணனே!உன்
அருள் நிறை பார்வையால் அகிலம்
பொருள் நிறை புகழுடன் மனங்கள் மலர்மணம் பரப்பவே
அருள் நிறை ஒளிர்கவே! தினங்கள் தினம் தினம் மலர்கவே!

நன்றி!
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

அனைவர்க்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு
இதயம் நிறை வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக