சனி, 6 ஜூன், 2009

"பதிலாகும் மதி!"

மதியோடு தண்மதி சேர்க்கும் தனிமதியே!என்
மதியோடு தண்மதி சேர்க்கும் ஓர் ஆதங்கம்!
மதிநாடும் மதிமுற்றமதில் தனிமதியே!என்
மதிநாடும் மதிசுற்றிவரும் கவிமதிகளைத்தந்துவிடு!

சுதியோடும் இரசனையுள்ள அனைவருமே நல்
மதியோடும் இரசனையின் வண்ணங்களை நல்
மதியோடும் கவியாக்கித் தரமுடியும்! உன்
மதியோடும் கவியாக்கும் வண்ணமிது!என்

மதியோடும் நடைபோடுவது என் கிறுக்கல்கள்!அது
சுதியோடும் நடைபோடுவது என் இரசனைக்குள்!மது
மதியோடும் விடைகூடுவது உன் இரசனைக்குள்!உன்
மதியோடும் விடைதேடுவது உன் கிறுக்கல்களே!

நதியோடும் தென்றலோடு மதிதேடும் மாணவன்!இவன்
விதியோடும் முன்றலோடு விளையாடுவான்!நல்
மதியோடும் திங்களோடும் விடைதேடுவான்!சொல்
மதியோடும் பொங்கலோடும் நடைபோடுவான்!இவன்

மதியறியாப் பள்ளி மாணவன்தான்! கல்வி
மதியறியாப் புள்ளியில்லா மாணவன்தான்!இவன்
மதியறியாப் பாடங்கள் ஏராளம்!தன் தனி
மதியறியாப் பாடங்கள் தாராளம்!இவன்

சதியறியாப் பிள்ளையாய் பிறந்துவிட்டான்!தன்
மதியறியாப் பிள்ளையாய் வளர்ந்துவிட்டான்!
சுதியறியா மனங்களின் மத்தியிலே தன்
மதியறியா நற்தினங்களை செலவுசெய்தான்!

கதியறியாப் பிள்ளையாய் கதறுகையில்
கதியறிந்து கைகொடுத்த தெய்வமதாய்
சுதியறிந்த கண்ணனவன் தாஸனவன் தன்
மதியறிந்த எண்ணங்களால் வடம்பிடித்தான்!

நதியறியாப் பிள்ளையிவன் கைபிடித்து "வாழ்க்கை
விதிவழியே பயணம்" என்று தெரியவைத்து
"மதியறியாப் பிள்ளை என்று யாருமில்லை!உன்
மதிவழியே பயணமதாய் நானிருப்பேன்" என்று

நதிதவழும் தமிழ்க்கடலின் முத்துதனை என்
மதிவருடி அமிழ்தினிதாய் கோர்த்தெடுத்து
சுதிதவழும் தென்றலதாய் வருடவைத்தான்!என்
மதிவருடும் கண்ணனுக்குத் தாஸனவன்!

"நதிவழி விதிவழி பயணங்கள்! நம் கோலம்
மதிவழி முயற்சிவழி முடியும் என்ற நம்பிக்கைவழி
விதியோடும் வழியோடு நடைபோடு! காலம்
நதியோடும்! வழிகூடும் விடைதேடும்! நம்பிக்கைப்படி!"என்று

மதியோடு விடைதேட கால நதியோடுகிறது!
மதியோடு கவிதை நடை போடுகிறது! காலம்
சுதியோடு விளையாடி கரைந்தோடுகிறது!ஞாலம்
சுதியோடு கவி தையோடு நிறைந்தாடுகிறது!

நதிதேடும் படலமிது! நடைபோடும் உடலமது!
விதிதேடும் காலம்வரை விடைகூறும் பயணமிது!தன்
மதியோடும் விளையாடும் வான்சுடர்தாஸன் பயணமிது!
"கதியோடும் கலங்காதே!" என்ற செங்கதிரோனின் உடலமிது!

கதிரோடு வந்தது! கதிரோடு கலக்கட்டும்!
சதிராடும் சந்தங்கள் சுதிவிலகாது பிறக்கட்டும்!
பதிலாகும் சொந்தங்கள் பதினாறும் பெற்றிடட்டும்!
பதிலாகும் புவி வந்தது! நற்பதிலாகும் கவிதந்தது!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
19-12-2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக