சனி, 6 ஜூன், 2009

"புதுமைப்பெண்ணாள்!'

பாரதிகண்ட புதுமைப்பெண்!
யாரதில் புதுமைகொண்டார்கள்!
பாரதில் பாரதி சொன்னதன் அர்த்தம்
பாரதில் சில மாதர்கள் கொள்வதன் அர்த்தம்

பாரதில் புதுமைதான்!கவிமேதை
பாரதி பார்த்திட்டால் காறி உமிழ்வுதான்!
பாரதி கண்டது வேறுதான் சிலமாதர்கள்
பாரதில் கொண்டது வேறுதான்!

வேரதைப்பிடுங்கவா சொன்னான்!களை
வேரதைப்பிடுங்கவே சொன்னான்!அதன்
சார்பதை புரிந்திடா மாதர்கள் சிலர்
வேர்களைப்பிடுங்கி எறிவதைப்பாரீர்!

யார் அதன் காரணம்! பார் அதன் காரணம்!
நேர் அதன் தோரணம்! பார் அதன் பா ரணம்!
சேர் அதன் சீதனம்! சார் அதன் வேதனம்!
பார் அதன் பாமனம்! வேர் அதன் பூமணம்!

பார்புகழ் அன்னை திரேசா!
பார்புகழ் கண்ட திரேசா!அவள்
பார்மனம் கொண்ட அன்பால்
பார்மணம் கண்ட இன்பால்!

பாரதிகண்ட பெண்ணாள்!அவள்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!தன்
பேர் அபிமானங்கொண்டு தன்
பேர் அதைக் கெடுத்தாள் இல்லை!

யார் அவள் பண்பைப் பெற்றார்!
யார் அவள் தண்டம் பெற்றார்!
தேர் அவள் ஏறிவரத் தன்னைப்
பேர் அவள் கூறி விற்றாளா!இல்லை!

சார்பிலா சமயம் போற்ற
சேர்நிலா மனங்கள் ஏற்ற
பார்நிலா கண்ட பெண்ணாள்!அவள்
பார்நிலா பாரதி கண்ட புதுமைப்பெண்ணாள்!

நன்றி
சுபம்!

அன்புடன்
ஆதித்ததாஸன்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3877&pid=48099&mode=threaded&start=#entry48099

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக