மார்கழி மாதம்! மண்ணில்
வேர்களின் ஈரம்!மண்ணில்
சேர்கதிர் ஒளியாய் மைந்தன்
மார்கழி தளிராய்ப் பிறந்திட்ட திருநாள்!
கார் இருள் அகற்றி புவி
சேர் அருள் நிறைக்க
பார் புகழ் மைந்தன்
பார் உதித்திட்ட திருநாள்!
நேர் கொண்ட பார்வை
சீர் கொண்ட கோர்வை
தேர்கொண்ட அன்பால்
பார்கண்ட பாலன் பிறந்திட்டத்திருநாள்!
சோர்வுள்ள மனங்கள்
சோர்வினை நீக்கி புவி
சேர்கின்ற "அன்பே ஜெயம்" என்று விளங்க
பேர்சொல்லும் அன்பன் உதித்திட்ட திருநாள்!
சீர்கொண்டு வாழ்த்துக்கள்! நிலா
சேர்கொண்ட நெஞ்சங்கள் அன்பு
வேர்கொண்ட நீர்போல் உலா
பேர்கொண்டு புகழ்பெற வாழ்த்துக்கள்!
நன்றி
சுபம்
அன்புடன்
ஆதித்ததாஸன்
காதல் முத்து (3)
14 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக