சனி, 6 ஜூன், 2009

"எனக்கும் உனக்கும்"

எனக்கும் உனக்கும்
கணக்கு வழக்கு!
நினைக்கும் பொழுது
சிரிப்பு வருகுது!

கனக்கும் இதயம்
கணக்கு வழக்கில்
எனக்குள் உதயம்
உதித்து வருகுது!

"தனக்குத் தனக்கு" என்ற
உரிமைக் கணக்கில்
மனத்துள் தனக்குள் ஒன்றாய்
கனக்கும் வழக்கில்

எனக்குள் வழக்கு ஒன்றின்
தீர்ப்புத் தெரிய என்
மனத்துள் நினைத்துப்பார்த்தேன்!
எனக்குச் சிரிப்பு வருகுது!

தினத்துள் தினம் இன்று
வருடக்கணக்கில் ஒன்று
மனத்துள் கனத்துக் கொண்டு
மறையப் போகிறது!

வனத்துள் நிறைக்கும் ஒன்று
"மனத்தில் விலக்கு" என்று
தினத்துள் தினமாய் இன்று
உருளப் போகிறது!

எனக்குள் இருக்கும் உனக்குள்
என்னைத் தெளியவைத்து
உனக்குள் இருக்கும் வழக்குள்
என்னைப்புரிய வைத்து

கனக்கும் மனத்துள் களிப்பைக்
கண்டு இரசிக்க வைத்து
எனக்கும் மனத்துள் வெளிப்பைத்
தந்து உரசிச் செல்லும்

எனக்குள் இருக்கும் உன்னை
நினைத்துப் பார்த்தேன்!என்
மனத்துள் இருக்கும் என்னை
நிறுத்துப் பார்த்தேன்!

எனக்குள் இருந்த வழக்கு
எனக்குள் கிழக்கைக்காட்ட
மனத்துள் வருத்தம் தீர்ந்து
புதுப்பொலிவை எனக்குள் பார்த்தேன்!

நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக